கடைசியில ஏகே-வும் இதுல சிக்கிட்டாரே! - ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் அல்வா கொடுக்க காரணம் இதுதானாம்!..

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசைர்பைசான் நாட்டில் சில நாட்கள் நடந்தது. இப்போது கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் டிசம்பர் முதல் வாரம் அதேநாட்டில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

ஒருபக்கம், ஏற்கனவே அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக செய்திகள் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரனும் அது தொடர்பான வேலைகளை பார்த்து வந்தார். இந்நிலையில்தான், ஆதிக்குக்கு அஜித் அல்வா கொடுத்துவிட்டார். ஆம்.. அஜித்தின் 63வது படத்தை ஆதிக் இயக்கப்போவதில்லை.

இதையும் படிங்க: ஞானவேல் அடக்கி வாசி!.. ஒழுங்கா மன்னிப்பு கேளு!. அமீருக்கு ஆதரவா களமிறங்கிய பாரதிராஜா…

முதலில் இந்த படத்திலிருந்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் விலகினார். ஏனெனில், விடுதலை 2 படம் தள்ளிபோவதால் அஜித் படத்தின் தயாரிப்பு வேலையில் அவரால் ஈடுபடமுடியாமல் போகும் என நினைத்தார். இதையடுத்து தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர். போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் படத்தை தயாரிப்பது உறுதியாகிவிட்டது.

இப்போது தயாரிப்பு நிறுவனம் மாறவும் இயக்குனரும் மாறிவிட்டார். தெலுங்கில் பாலைய்யாவை வைத்து ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை இயக்கிய கோபிச்சந்த் மலினேனிதான் இயக்குனர் என சொல்லப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர். படம் போல தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இண்டியா படமாகவே எடுக்கும் என கருதப்படுகிறது. இதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் தாங்க மாட்டார் என்பதால்தான் அவரை அஜித் தூக்கிவிட்டதாக் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கமல்-ரஜினி போல அஜித்-விஜய் ஏன் செய்வது இல்லை..? செஞ்சா அவங்க வாழ்க்கை என்ன ஆகுறது? எல்லாமே ப்ளான் தான்..!

விஜய் கூட வாரிசு படம் மூலம் தமிழ், தெலுங்கு என நடித்துவிட்டார். அஜித் இதுவரை தமிழை தவிர வேறு மொழி படங்களில் நடித்தது இல்லை. எனவே, இந்த படம் மூலம் நாமும் பேன் இண்டியா அளவில் செல்ல வேண்டும் என நினைத்தே அஜித் இதை டிக் அடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கடைசியில் பேன் இண்டியா நடிகராகும் ஆசை அஜித்துக்கும் வந்துவிட்டது போல!...

இதையும் படிங்க: கலைஞர் விழாவில் அஜித் அப்படி பேசுனதுக்கு இவர்தான் காரணமாம்… என்னதான் இருந்தாலும் வளர்த்தவராச்சே!…

 

Related Articles

Next Story