Connect with us

Cinema News

10 ஆண்டுகள் படுக்கையறை என்ஜாய்… இப்போ மீடூ புகாரா.?! கொந்தளித்த சர்ச்சை நாயகி ரேகா.!

பார்த்திபன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் அரை நிர்வாணமாக, மார்பு தெரியுமளவு (ஆனால் அது கவர்ச்சியாக இருக்காது ) நடித்து அதிர்வலையை கிளப்பியவர் நடிகை ரேகா நாயர்.

இவர் பிரபல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தான் தெரிந்த முகமாக மாறியுள்ளார். படத்தில் நடித்தது போலவே, பல பேட்டிங்களில் தனது  வெளிப்படையான கருத்துக்கள் சர்ச்சையாக மாறினாலும் பரவாயில்லை என தனது கருத்தை பகிரங்கமாக முன்வைக்கிறார்.

அப்படிதான் ஒரு பேட்டியில் அண்மையில் பேசியுள்ளார், அதில் பேசுகையில், ‘ பாலியல் தொந்தரவு என்பது சினிமா துறையில் மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும் வந்துவிட்டது. பள்ளிக்கூடம் வரையில், அதிக மார்க் வேண்டுமானால் ஸ்டாஃ ப் ரூமுக்கு வர சொல்வது போன்ற வக்கிர புத்தி உள்ள ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அனைவரும் தப்பான ஆண் கிடையாது.

இதையும் படியுங்களேன் – சூப்பர் ஸ்டாரின் அந்த படம் வெளங்காம போனதுக்கு காரணமே 2 பொண்ணுங்க தான்.! வெளுத்து வாங்கிய பிரபலம்.!

நீ என்னுடன் படுத்தால் தான் ஷூட்டிங் வர முடியும் என எந்த இயக்குனரும் சொல்வது கிடையாது. நீங்கள் அந்த நேரம் உடலுறவு கொண்டு என்ஜாய் செய்துவிட்டு, அதில் வரும் பணத்திலும் என்ஜாய் செய்துவிட்டு, 10 வருடம் கழித்து மீ டூ புகாரில் அந்த ஆள் அங்க தொட்டான். இந்த ஆள் இங்க தொட்டான் என கூறுவது நியாயமில்லை. என சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார் நடிகை ரேகா நாயர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top