Retro: ரெடின் கிங்ஸ்லிதான் ஹீரோ!.. மொக்க படத்துக்கு இதுதான் கதை… ரெட்ரோவை புரட்டியெடுத்த புளூசட்ட..

by Akhilan |   ( Updated:2025-05-01 22:51:56  )
Retro: ரெடின் கிங்ஸ்லிதான் ஹீரோ!.. மொக்க படத்துக்கு இதுதான் கதை… ரெட்ரோவை புரட்டியெடுத்த புளூசட்ட..
X

Retro: சூர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் நேற்று திரைக்கு வந்து இருக்கிறது ரெட்ரோ திரைப்படம். இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்க ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ச்சியாக விமர்சனம் வெளிவரும் நிலையில் பிரபல திரை விமர்சகர் புளூசட்ட மாறன் சொல்லி இருக்கும் விமர்சனம் இதோ!

ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில பெரிய ரவுடியா இருக்காரு. அவருக்கு குழந்தை இல்ல. அப்ப அவரிடம் வேலை செய்யும் ஒருவர் இறந்துவிட அவர் பிள்ளையை நாம் எடுத்து வளர்க்கலாம் என மனைவி சொல்ல பிடிக்காமல் இருந்தாலும் சரி என சொல்லி விடுகிறார்.

சூர்யா அவரை அப்பா என அழைக்கும் போது யாரு உன் அப்பா என திட்டுகிறார். அந்தம்மா ஒரு காலத்தில் இறந்து போயிடுறாங்க. இறக்கும் போது அப்பாவை நீ விட்ற கூடாதுனு சொல்லிடுறாங்க. இந்த பையனும் ரவுடியாவே வளர்கிறான்.

அவனுக்கு ஒரு கட்டத்தில் காதல் வருகிறது. ஆனா அந்த பொண்ணு ரவுடித்தனத்தை விட்டுட்டு வா என கூற இவரும் ரவுடித்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு கல்யாணம் செய்ய போறாரு. அப்போ ஒரு சம்பவம் நடக்குது. ஜோஜு ஜார்ஜிருக்கு வரவேண்டிய கன்சைன்மெண்ட்டை சூர்யா தடுத்து வைத்து இருக்கிறார்.

அது எனக்கு உடனே வர வேண்டும் என கல்யாணத்துக்கு ஜோஜு பிரச்சனை செய்ய அது உங்களுக்கு வந்தால் நல்லதல்ல என சூர்யா சொல்கிறார். அதை எனக்கு உடனே வேணும் என அவர் கூற சூர்யா முடியாது எனக் கூறுகிறார். அவர் உடனே உன்னுடைய காதலியை என்ன செய்கிறேன் பார் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

சூர்யா இப்போ திரும்பி அடிக்கிறாரு. இதற்கு ராமாயணம், மகாபாரதம், இதிகாசம் போய் 1970, 80, 90 கிமு வரை சென்று ஒரு பேய் கதை சொல்றாங்க. அதான் இந்த படத்தோட கதை. சினிமாவுல நல்ல எழுத்தாளர்கள் சொல்ற விஷயம்.

ஒரு நல்ல படம் தனக்கு தேவையான சீன்களை அதுவே டிமாண்ட் பண்ணி வாங்கி வைத்துக் கொள்ளும். அவர்கள் சொல்லாத விஷயம் என்னவென்றால் மொக்கையான திரைப்படம் தனக்கு தேவையான மொக்கையான சீன்களை டிமாண்ட் செய்து வைத்துக் கொள்ளும்.

அப்படி மொக்கை மொக்கையான சீன்களை எல்லாம் வாங்கி சொருவி நம்மையும் சொருவிட்டு போச்சு இந்த ரெட்ரோ. இதை மாதிரி படத்துக்கு வில்லன் ஸ்டிராங்கா இருக்கணும். ஆனா இங்க முதல்ல வில்லன் ஜோஜு ஜார்ஜ் என்று நாம் நினைத்தால் அதன் பின்னர் பிரகாஷ்ராஜ் வருகிறார்.

அடுத்து நாசர் இல்ல அவருக்கு மகனாக நடித்தவரா என வில்லன் கேரக்டரிலே பல குழப்பம் இருக்கிறது. அப்ப வில்லன் கேரக்டர் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்னு பாருங்க. தூத்துக்குடியில் ஆரம்பிக்கிற கதை எங்கேயோ போகிறது. அந்த அம்மாவை ஏன் காசியில் அடக்கம் பண்ண போனாங்க.

அங்கேயிருந்து ஆஃப்ரிக்கா போறாங்க, அப்புறம் அந்தமானுக்கு போறாங்க. அங்க வில்லன் கூட்டம் கிளாடியேட்டர் சண்டை போடுது. அப்புறம் லாஃப்டர் தெரபினு ஜெயராம கூட்டிட்டு வந்து காமெடி பண்ணிட்டு இருக்காங்க அது துளி கூட ஒர்க் ஆகல. காமெடி சீன்கள் கொஞ்சம் இருக்கு ஆனா அதுல நமக்கு எதுவும் சிரிப்பு வராது.

ஒரு காமெடி சீன் இருக்கு. சூர்யாவுக்கு ரெட்டின் கிங்ஸ்லி கெட்டப் போட்டு இருந்தாங்க. அது நமக்கு காமெடியா இருக்கு. ஆனா படத்துல அது சீரியஸான சீன். நிறைய கேரக்டர்கள் தேவையில்லாம வந்து போறாங்க. கனி பாட்டை கூட முழுசா ரசிக்க விடலை.

கட் பண்ணி போட்டு விட்ருக்காங்க. ஜானி பாட்டை முழுசா போட்ருக்காங்க. சமீபத்தில் விடாமுயற்சி படம் வந்தபோது கழுவி ஊத்தனாங்க. ஆனா குட் பேட் அக்லி வந்து விடாமுயற்சி நல்லா இருக்கு என கூறினார்கள். அதுபோல அடுத்த படம் வந்தா ரெட்ரோ நல்லா இருக்குன்னு சொல்ற நிலைமை வரும்.

பழசு ஆக ஆக தான் மதிப்பு. அதனால நம்ம வருங்கால சந்ததி இந்த படத்தை பத்தி பேசட்டும் உங்களுக்கு ஏதாவது வேலை வெட்டி இருந்தா போய் பாருங்க என புளூசட்ட மாறன் முழு படத்தை புரட்டி புரட்டி எடுத்திருக்கிறார்.

Next Story