Categories: latest news

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? டிடி நெக்ஸ்ட் லெவலுக்குப் பட்டும் படாமலும் ஒரு ரிவியு

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. காமெடி அட்டகாசம். செகண்ட் ஆஃப் சூப்பர் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு படத்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் முதலீடு போட்டு தயாரிப்பாளர் எடுக்குறாரு. அதை ஈசியா விமர்சனம் செய்து விட்டு படத்தை ஓட விடாமலும் சிலர் செய்கிறார்கள். அதே நேரம் எந்த விமர்சகர்களாலும் நல்லா இருக்குற படத்தை ஓட விடாமல் செய்ய முடியாது. அதே நேரம் நல்லா இல்லாத படத்தை ஓடவும் செய்ய முடியாது. அப்படின்னு பலமாக இந்தப் படத்தில் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சந்தானம் தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். படத்தில் நிழல்கள் ரவி காமெடி எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. கௌதம் மேனனை உயிரின் உயிரே பாடலுக்கு ஆட விட்டுருக்கிறார்கள். காமெடியும், ஹாரரும் படத்தில் ஒட்டவில்லை. அப்படியே படத்தின் கதை ஜம்ப் ஆகியபடியே இருக்கிறது.

சின்ன சின்ன கேரக்டர்களில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாகச் சொல்லணும்னா வடக்குப்பட்டி ராமசாமியில் கூல் சுரேஷின் கேரக்டர் கூட சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த வகையில் படத்தில் அது மிஸ் ஆகி உள்ளது. மற்றபடி டெக்னிக்கல் லெவலில் சூப்பர். படத்தின் கதை கேட்க பிரமாதம். எடுக்கப்பட்ட விதத்தில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது.

தப்பு தப்பாக ரிவியு சொல்லும் விமர்சகர்களை ஒரு தியேட்டர் ஓனர் பேயாக வந்து பழிவாங்கும் கதை. படத்தில் செல்வராகவன் தான் தியேட்டர் ஓனர். அவர் விமர்சகர்களை எல்லாம் திட்டுறாங்க. அவரையும் ஒரு கட்டத்தில் கொன்று விடுகிறார்கள். செல்வராகவன் பேயாக மாறி விமர்சகர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்.

அதில் ஒருவர் சந்தானம். அது ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு போனதும் சந்தானத்தின் ஃபேம்லி என்ன ஆகிறது? படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவராக காலியாகிறார்கள். தாக்குப்பிடித்தால் அவர்கள் தப்புவார்கள் என்பதுதான் கதை. ஓடாத படத்தை எந்த ரிவியூவராலும் ஓட வைக்கவே முடியாது.

ஓடும்னு இருந்தா அதை இன்னும் கொஞ்சம் பூஸ்ட் பண்ணி ரிவியூவர்ஸ் ஓட வைக்கலாம். இந்தப் படம் ஜாலியாக சிரித்து விட்டு வர வைத்ததா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago