பல கோடி ரூபாய் சொத்துக்களை கை மாற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுமே தெரியாத பிச்சைக்காரர்களை பினாமியாக்கலாம் என்கிற ஐடியா எல்லாம் ஓகே தான். ஆனால், அதை கடைசி வரை மெயின்டெயின் பண்ணாத இடத்தில் தான் படம் பல இடங்களில் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆவது போல தெரிகிறது.
சேகர் கம்முலா எழுதி இயக்கியுள்ள குபேரா திரைப்படம் இன்று வெளியானது. படத்திற்கு பெரிதாக டிக்கெட் புக்கிங் இல்லாத நிலையில், படத்துக்கு ஹைப் இல்லாததே கடைசியில் பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. தனுஷின் நடிப்பை பார்த்த ரசிகர்களுக்கு மனுஷன் இன்னம்மா நடிச்சிருக்காரு என கொண்டாடுகின்றனர்.
ஆனால், ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன் மற்றும் அவருக்கு பின்னாடி தனுஷ் ஹட்ச் டாக் போல போகும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பெரிய வேகத்தடையாகவே தெரிகிறது.
4 பிச்சைக்காரர்களை வைத்து 40 ஆயிரம் கோடி பணத்தை லஞ்சமாக கொடுக்கும் பணியை நாகார்ஜுனா ஏற்று செய்வதாக கமிட் ஆகி வருவது எல்லாம் ஓகே தான். ஆனால், அவருடைய கதாபாத்திரத்தில் ஏதாவது அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன் போல பிரில்லியண்ட் ஆன ரைட்டிங்கை சேகர் கம்முலா எழுதாமல் விட்டதும் அவருடைய முடிவும் படத்தை தொங்க விட்டு விடுகிறது.
திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தேவா கதாபாத்திரத்தில் அறிமுக காட்சியிலேயே தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். கொடுத்த காசுக்கு தேவையான பல விஷயங்களை படம் முழுக்க கொடுத்தாலும், கடைசியில் ஏதோ அவசர கதியில் படத்தை முடித்து விட்டது போலவும், பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவரை பணக்காரன் அத்தனை ஆட்களையும் அரசையும் கையில் வைத்துக் கொண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது எல்லாம் லாஜிக் மீறல்களாகவே உள்ளன.
இன்னமும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால், தனுஷ் நடித்த நடிப்புக்கும், நாகார்ஜுனா போட்ட உழைப்புக்கும் பலனாக இருந்திருக்கும். வில்லன் ஜிம் சர்ப்பை கடைசியில் பிச்சை எடுக்க விடுவதெல்லாம் ஒட்டவே இல்லை.
குபேரா ரேட்டிங்: 3.25/5
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…