Kuberaa Review: சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் அடித்து சோஷியல் திரில்லராக உருவாகியிருக்கும் படம்தான் குபேரா. இந்த படம் வருகிற 20ம் தேதி தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே, இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை பின்னணியில் சம்பவங்கள் நடப்பது போல கதையை எழுதி இருக்கிறார் சேகர் கம்முலா. இதில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா ஆகிய எல்லோருமே இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதை அவர்கள் இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறார்கள்.
அதுவும் குபேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். அவரின் தோற்றமே படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் டீசரும், சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் ஹைப் ஏற்றியிருக்கிறது. ஒரு பணக்கார வில்லனுக்கும், ஒரு நேர்மையானவருக்கும் இடையே தனுஷ் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை என்பது டிரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.
இந்நிலையில், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களை டிவிட்டரில் விமர்சித்து வரும் உமைர் சாந்து என்பவர் குபேரா படம் பற்றி பதிவிட்டிருக்கிறார்.
ஒரு பவர்புல் கிரைம் திரில்லர். நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதை என்கேஜாக இருக்கிறது. கிளைமேக்ஸ் படத்திற்கு பெரிய பலம். எப்படி நடிப்பது என தனுஷிடம் அமீர்கான் கற்றுக்கொள்ள வேண்டும்’ என நக்கலடித்திருக்கிறார்.
இந்த அமைர் சந்து தக் லைப் படம் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பே படம் நன்றாக இருப்பதாக பதிவிட்டார். அப்போதே அவர் படம் பார்த்துவிட்டுதான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் பலருக்கும் வந்தது. இப்போது குபேரா படம் பற்றி பேசியிருக்கிறார். உண்மையிலேயே இவர் படம் பார்த்தாரா என்பது தெரியவில்லை. இவர் நம்மூர் பயில்வான் ரங்கநாதன் போல பாலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க பற்றி தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வருபவர். அதேபோல், பாலிவுட் படங்களை மட்டம் தட்டி தமிழ் சினிமாக்களை பாராட்டியும் பேசி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…