புலிக்குப் பிறந்தது யானைன்னு நிரூபித்தாரா சண்முகப்பாண்டியன்? படைத்தலைவன்ல எது மைனஸ்?

யுஎஸ்.அன்பு இயக்கத்தில் இன்று வெளியான படம் படைத்தலைவன். ஒடிசா பழங்குடி மக்களில் ஒருவரான முனிஸ்காந்த் கனவு காண்கிறார். அதுல யானை வருது. கனவுக்கும், யானைக்கும் என்ன சம்பந்தம்? பொள்ளாச்சி மலைவாழ் கிராமத்துல ஒரு யானையை 25 வருஷமாக சண்முகப்பாண்டியன் வளர்க்குறாரு. அவரது தந்தை கஸ்தூரிராஜா.
இவங்களுக்குள்ள குடும்ப பிரச்சனை இருக்கு. வட்டிக்கு விடுற ஆள்கள்தான் வில்லன் கேங். ஆனா பெரிய அளவில் ஒர்க் ஆகல. கடன் பிரச்சனையால் யானையைக் கைவிடுகிறார் சண்முகப் பாண்டியன். அதை எப்படி மீட்டு எடுக்கப் போறாருங்கறதுதான் கதை. ஒடிசாவில் கண்ட கனவுக்கும், ஹீரோவுடைய வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை. படத்துக்கு பெரிய பிளஸ் இளையராஜா. பின்னணி இசை சூப்பராக உள்ளது.
ஹீரோவை பல கேங்குகள் ஃபாலோ பண்ணி அவரைக் கொல்ல பார்க்குறாங்க. இவங்க எதுக்காக இப்படி பண்றாங்கன்னு தெரியல. உங்களுக்கு இருக்குற பிரச்சனைத் தீரணும்னா கேப்டன் விஜயகாந்தைப் பார்க்கணும்னு சொல்றாங்க. படம் ஆரம்பிக்குதுக்கு முன்னாடி விஜயகாந்த் குறித்து டாக்குமெண்ட்ரி போடுறாங்க. விஜயகாந்த் வர்ற சீன் ரொம்ப மாஸா இருக்கு.
தன்னுடைய யானைக்கு அவன் தலைவன்னு சண்முகப்பாண்டியன் நிரூபிச்சிருக்காரு. யானையைத் தேடுறதையே ஃபாலோ பண்றாங்க. அவருக்கும் கதைக்கும் கனெக்ட் ஆகவே இல்லை. கடைசில தான் கொடுக்குறாங்க. இந்தப் படத்துல திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பு இல்லை. ஆக்ஷன் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மாஸா ஃபைட் கொடுத்துருக்கலாம்.
ஆனா சண்முகப்பாண்டியன் உடம்பு நல்லா பயில்வான் மாதிரி இருக்கு. படம் டிராமா பார்த்த மாதிரிதான் இருக்கு. அமைதியான, ஆக்ரோஷமான நடிப்பை சண்முகப்பாண்டியன் வெளிப்படுத்திருக்காரு. இன்னும் நிறைய நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கணும். புலிக்குப் பிறந்தது பூனையாகுமான்னு சொல்வாங்க. ஆனா இவரு புலிக்குப் பிறந்த யானை. கேப்டனை மனசுல நினைச்சிக்கிட்டுப் படத்தைப் பார்க்கலாம். மேக்கிங் நல்லாருக்கு. இந்தப் படம் சண்முகப்பாண்டியனுக்கு ஒரு மேஜிக் என்றே சொல்லலாம்.