கேப்டனின் வெற்றிடத்தை நிரப்ப வந்த ஜூனியர் கேப்டன்... படைத்தலைவன் எப்படி இருக்கு? குடும்பத்தார் சொல்வது இதுதான்..!

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நேற்று நடந்த பிரிவியு ஷோ பார்த்து விட்டு கேப்டனின் குடும்பத்தார் என்ன சொல்கிறார்கள்னு பாருங்க. படைத்தலைவன் படத்தைப் பார்த்த பிரேமலதா என்ன சொல்கிறார்னு பாருங்க.
ஒவ்வொரு விஷயமும் அன்பு அருமையாகப் பண்ணி இருக்கிறார். இளையராஜா மீண்டும் ராஜா ராஜாதான்னு நிரூபிச்சிருக்கிறார். கேமரா மேன் மிகப் பிரமாதமாக ஒர்க் பண்ணி இருக்கிறார். சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் இருக்கு. கேப்டனை மறுபடியும் லைவா பார்க்குறது மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தாலும், மன அழுத்தமாகவும் இருக்கு.
இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடணும்னு வாழ்த்துறேன். காடுகளின் உள்பகுதியில் போய், யானைகளுடன் கஷ்டப்பட்டு ஒர்க் பண்ணிருக்காங்க. அது பிரேம் பை பிரேம் தெரியுது. ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
படைத்தலைவன் பிரிவியு ஷோவைப் பார்த்த அண்ணன் விஜய பிரபாகரன் படத்தைப் பற்றிப் பேசும்போது கேப்டன் திரும்பவும் திரையில் வந்த மாதிரி தான் தெரிந்தது. இந்தப் படத்தை தயாரிப்பாளர், இயக்குனர் என எல்லாருமே கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஆரம்பத்துல இருந்து எல்லா சீனுமே சென்டிமென்டா போய்க்கிட்டே இருக்கு. ஆக்ஷன் ப்ளாக் வரும்போது சண்முகப்பாண்டியன் ஃபைட் அபாரமாக இருக்கு. கேப்டனின் வெற்றிடத்தை நிரப்ப ஜூனியர் கேப்டன் சண்முகப்பாண்டியன் வந்துட்டாப்ல. அண்ணனா சொல்லல. ஒரு ஆடியன்ஸா சொல்றேன்.
இளையராஜாவின் பிஜிஎம் கேப்டனுக்கு சத்ரியன் உள்பட பல படங்களில் போட்டுருக்காரு. அதே மாதிரி இந்தப் படத்திலும் போட்டுருக்காரு. நீ பொட்டு வச்ச தங்கக் குடம் பாட்டு பொன்மனச்செல்வனுக்கு அப்புறம் லப்பர் பந்துல ஹிட்டாச்சு. அதுக்கு அப்புறம் இந்தப்படம்தான். ஆடியன்ஸ் எல்லாரும் கிளாப் பண்ணினாங்க. இந்த பிரிமியர் ஷோவுல எல்லாருமே எழுந்து கிளாப் பண்ணினாங்க. இந்தப் படம் நிச்சயமா வெற்றி பெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.