ரஜினி படத்தில் தப்பா காட்டிட்டாங்க...வாயை விட்டு வம்பில் மாட்டிக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி.!

எப்போதும் கருத்துக்கள் என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே தான் இருக்கும். அது காலத்துக்கு ஏற்றார் போல தன்னையும் வளர்த்துக்கொள்ளும். பல வருடங்களுக்கு முன்னர் சரியாக தெரிந்த ஒரு விஷயம் தற்போது தவறாக தெரியும் .

ஏன், சிவகாசி படத்தில் விஜய் பேசும் ஆடைகள் பற்றிய கருத்துக்களும், மாஸ்டர் விஜய் பேசிய ஆடை பற்றிய கருத்துக்களும் முரண்பாடானவை. ஆனால், இரண்டும் அந்தந்த காலத்திற்கு சரியென பதியப்பட்டவை.

அப்படி தான் பல வருடங்களுக்கு முன்னர் திரைப்படங்களில் பேசப்பட்ட பல கருத்துக்கள் தற்போது பேசு பொருளாக மாறிவருகிறது. அப்படி ஒரு கருத்தை தான் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் - அந்த கெட்ட வார்த்தைக்கு காரணம் யார் தெரியுமா.! நான் எழுதல.., நழுவி கொண்ட லோகேஷ்.!

அவர் அண்மையில் ஒரு பட விழாவில் கூறுகையில், ' ரஜினி நடித்த மன்னன் படத்தில் படித்து ஒரு தொழிற்சாலையை நிர்வகிக்கும் விஜயஷாந்தியை கெட்டவர்கள் போலவும், வீட்டில் அம்மாவை பார்த்துக்கொண்டு காபி போட்டு கொடுக்கும் குஷ்பூவை நல்லவர்கள் போலவும் காட்டியிருப்பர். வரும் காலத்தில் இது போன்று காட்டாமல் இருங்கள் என கூறி இருப்பார்.' ஆர்.ஜே.பாலாஜி.

இவரின் இந்த கருத்து தான் தற்போது கோலிவுட்டில் பேசு பொருளாகியுள்ளது. அப்போது ரஜினி தெரிந்தெடுத்த கதைக்களங்கள், தற்போது அவையெல்லாம் மாறிவிட்டன எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

 

Related Articles

Next Story