More
Categories: Cinema News latest news

15 வருஷம் உழைச்சிருக்கேன்!.. எல்லா அரசியல்வாதியும் எனக்கு தோஸ்த்து.. ஆர்.கே. சுரேஷ் ஓப்பன் டாக்!..

சினிமா பைனான்ஸியராகவும், தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பிரபலமான ஆர்.கே. சுரேஷ் ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவு ஆகி விட்டார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காடுவெட்டி எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் விரைவில் அந்த படத்தை வெளியிட காத்திருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஐயோ இது பாக்க நாலு கண்ணு வேணும்!. சிக்கென்ற உடையில் சுண்டி இழுக்கும் துஷரா!.

ஆருத்ரா கோல்டு மோசடி குறித்து இனி தான் பேசப்போவது கிடையாது என்றும் சினிமாவில் 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். பல நாட்கள் இரவு, பகல் தூங்காமல் உழைத்திருக்கிறேன். எத்தனையோ படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பைனான்ஸியராகவும் இருந்திருக்கிறேன். ஒரு செக் பவுன்ஸ் ஆகியிருக்குன்னு என் மேல ஒரு கேஸாவது இருக்கா? என்னோட 15 வருஷ உழைப்பை ஒரே ஒரு போலி செய்தி மூலம் நாசமாக்கிட்டாங்க என ஆர்.கே. சுரேஷ் சினிமா விழாவில் பேசியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் எனக்கு நல்லா தெரியும். அனைவருடனும் நல்லா பழகியிருக்கேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. எல்லாமே எனக்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சிகள் தான் என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி பட டைட்டிலை மகேஷ் பாபுவுக்காக ஆட்டையை போட்ட ராஜமெளலி?.. அட இதுதான் டைட்டிலா?..

மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி படத்தை போல இந்த காடுவெட்டி படத்திலும் நாடக காதல் கதையை மையமாக வைத்தே படத்தை உருவாக்கி உள்ளனர்.

ஆருத்ரா மோசடி வழக்கில் உங்களை தேடும் போது போலீஸ் விசாரணைக்கு ஆளாகாமல் நீதிமன்றத்தில் சரணடையாமல் ஏன் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டீர் என நெட்டிசன்கள் அவரது பேட்டிக்கு கீழ் கேள்விகளை அடுக்கி உள்ளனர்.

Published by
Saranya M

Recent Posts