More
Categories: latest news

ஒருத்தர்னு சொல்லிட்டு பத்து பேரு!.. ரவுடி பேபி சூர்யா கன்ணீர் பேட்டி…

சில வருடங்களுக்கு முன்பு டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவரின் நிஜப்பெயர் சுப்புலட்சுமி. டிக்டாக் ஆப்பில் வரம்பு மீறி ஆபாச உடைகளை அணிந்தும், ஆபாச வார்த்தைகளையும் பேசியும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர். இதன் காரணமாக பலருடனும் சண்டை போட்டு போலீஸ் நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டது.

Advertising
Advertising

ஜிபி முத்துவுடன் சண்டை போட்டது, டிக்டாக் இலக்கியாவை பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆடியோ லீக் ஆனது என பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, திருச்சியில் விபச்சாரம் நடந்த ஒரு இடத்திலும் பிடிபட்டார். ஒரு பெண் நடத்தி வந்த யுடியூப் சேனல் குறித்து ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டாஸ் வழக்கும் போடப்பட்டு ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில்தான் ஜாமினில் வெளிய வந்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியவர்கள் பேட்டியெடுத்து வரும் நடிகை ஷகிலா, ரவுடி பேபி சூர்யாவையும் பேட்டி எடுத்தார். அப்போது பல அதிர்ச்சியான தகவல்களை ரவுடி பேபி சூர்யா பகிர்ந்து கொண்டார்.

எனக்கு 20 வயதில் திருமணம் நடந்தது. எங்கள் கிராமத்தில் 3 மாதங்கள் ஆகியும் குழந்தை இல்லை எனில் மனைவியை விட்டு பிரிந்துவிடுவார்கள். எனக்கும் அதுதான் நடந்தது. அதன்பின் ஒருவரை கணவராக ஏற்று அவருடன் வாழ்ந்து வந்தேன். அவர் மூலம் இரண்டு மகன்களும் பிறந்தனர். என் கணவர் ஒரு குடிகாரர். குடும்பத்தை நடத்த செலவு இல்லாததால் பல ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்.

அந்த பணத்தை கூட எடுத்துச்சென்று குடித்துவிடுவார். நான் விபச்சாரம் செய்ததற்கு என் கணவரே காரணம். அதில் நான் பல வேதனைகளை அனுபவித்துள்ளேன். ஒருத்தர்தான் என சொல்லிவுட்டு 10 பேர் வருவார்கள். குடித்துவிட்டு அந்த பாட்டிலை என் பிறப்புறுப்பில் உள்ளே விட்டு கஷ்டப்படுத்தினர். என் குடும்ப சூழ்நிலையில்தான் நான் அந்த தொழிலை செய்தேன். ஆண் வர்க்கம் மீது எனக்கு கோபம் இருந்தது. அதனால்தான் சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசினேன்’ என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts