ஏகே 64 பட இயக்குனர் இவரா?!.. பதறிய சுரேஷ் சந்திரா!. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…

Ajithkumar: தமிழ் சினிமாவில் ஸ்டைலீஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். விஜய்க்கு அடுத்து இவருக்கு அதிக ரசிகர் கூட்டம் உண்டு. விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். அமராவதியில் துவங்கிய இவரின் சினிமா பயணம் 32 வருடங்களாக தொடர்ந்து வருகிறது. இந்த 32 வருடங்களில் பல வெற்றி தோல்விகளை பார்த்துவிட்டார்.
இவரின் விடாமுயற்சி படம் பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை. ஏனெனில் அந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தேவையான விஷயங்கள் எதுவுமில்லை. ஆனால், அதை ஒரு புது முயற்சியாக செய்து பார்த்தார் அஜித். ஆனால், அஜித் ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. ஆனால், குட் பேட் அக்லி படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.,
ஏனெனில், அஜித் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள், அஜித்தை எப்படி காட்டினால் அவர்களுக்கு பிடிக்கும் என்பதை புரிந்துகொண்டு ஒரு அஜித் ரசிகராகவே இந்த படத்தை ஆதிக் இயக்கியிருந்தார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த படம் அஜித் ரசிகர்களை முழுக்க திருப்திபடுத்தியிருக்கிறது. இந்த படம் இதுவரை 230 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 180 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஒருபக்கம் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குட் பேட் அக்லி ஹிட்டாக அமைந்துவிட்டதால் மீண்டும் ஆதீக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்களிடம் இருக்கிறது. ஒருபக்கம், அஜித்தை வைத்து படம் இயக்க தனுஷும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அவரிடம் இன்னமும் அஜித் முழுக்கதையை கேட்கவில்லை.
அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். அதற்காக கண்டம் விட்டு கண்டம் போய் கார் ஓட்டுக்கொண்டிருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம்தான் கார் ரேஸ் முடிவடைகிறது. எனவே, தனது அடுத்த பட இயக்குனர் யார் என்பதை ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதமே அவர் முடிவு செய்வார் என்கிறார்கள்.
இதற்கிடையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக சிலர் கிளப்பிவிட்டார்கள். இது செய்தியாளர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலேயே பகிர பதறிய சுரேஷ் சந்திரா ‘இந்த செய்தியில் உண்மையில்லை’ என மறுத்துள்ளார். பொதுவாக இதுபோன்ற வதந்திகளை கண்டும் காணாமலே இருப்பார்கள். சுரேஷ் சந்திரா மறுத்திருக்கிறார் என்றால் அதில் ஏதேனும் இருக்குமோ என்கிற சந்தேகமும் சிலருக்கு எழுந்துள்ளது.