கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு படிப்பு வேண்டாம்.. சினிமாவில்தான் நடிப்பேன் அதுதான் என் கெரியர் என விஜய் அடம்பிடித்ததார். ‘உனக்கு சினிமா வேண்டாம். அது மிகவும் கஷ்டம்’ என விஜயின் மனதை மாற்ற அவரின் தந்தை எஸ்,ஏ,சந்திரசேகர் முயற்சி செய்தார். ஆனால், விஜய் அடம் பிடிக்கவே நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படம் மூலம் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.ஏ.சி.
மகனை வைத்து யாரும் படம் எடுக்க முன்வர மாட்டார்கள் என்பதால் சொந்த காசை போட்டு படத்தை எடுத்தார். முதல் படமே பிளாப்..
அதன்பின் விஜயை வைத்து சில படங்களை இயக்கினார் எஸ்.ஏ.சி. ஆனால், எதுவும் பெரிசாக பேசப்படவில்லை. ஒருவழியாக விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் விஜயை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் விஜயின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரஜினியை விடவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார் விஜய். இந்நிலையில்,
விஜயிடம் 30 வருடங்களுக்கு மேல் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த பி.டி செல்வகுமார் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
நாளைய தீர்ப்பு படம் வெளியான போது எழுத்தாளர் சுஜாதா குமுதம் இதழில் அந்த படம் பற்றி விமர்சனம் எழுதியபோது ‘படத்தின் ஹீரோ விஜய்க்கு தகர டப்பா மூஞ்சி.. இவரை எல்லாம் யார் நடிக்க கூப்பிட்டார்?’ என்று ஏதோ எழுதிவிட்டார். அதைப் படித்து பார்த்து விஜய் கதவை சாத்திக்கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.. அதில் கோபமடைந்த எஸ்.ஏ.சி நேராக குமுதம் அலுவலகத்திற்கு சென்று ‘என் மகனைப் பற்றி அப்படி எழுதியது யாராக இருந்தாலும் அவரின் கையை வெட்டுவேன். ஜெயிலுக்கு போகவும் நான் தயார்’ என சண்டை போட்டார்..
சுஜாதா ஆடிப் போய்விட்டார்.. பெரிய சண்டையாகிவிட்டது.. அதன்பின் அமர்ந்து பேசி உங்கள் மகனைப் பற்றி இனிமேல் நல்ல விதமாகவும் எழுத மாட்டோம்.. நெகடிவாகவும் எழுத மாட்டோம்’ என குமுதம் சொல்லிவிட்டது’ என கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…