latest news
தோனியின் 200வது போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட சத்குரு!.. வைரல் புகைப்படங்கள்!..
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சி எஸ் கே அணிக்காக தனது 200 வது போட்டியில் பங்கேற்றார்.சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த ஐ பி எல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியை காண திறலான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் சத்குருவும் இப்போட்டியை கண்டுக்களித்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை காண பல திரைப்பிரபலங்களும் வந்திருந்தனர். அதோடு, சத்குரு ஜக்கிவாசுதேவும் இந்த விளையாட்டு போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்தார்.