More
Categories: Cinema News Entertainment News latest news

அப்டீனா ஓகே.. இப்படினா வேண்டாம்… கண்டிஷன் போட்ட மலர் டீச்சர்

மலையாளத்தில் பிரமம் திரைப்படம் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளையடித்த சாய் பல்லவி, தற்போது படங்களில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு இந்த மாதிரி தான் கதை இருக்க வேண்டும் என இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டு உள்ளாராம்.

Advertising
Advertising

தமிழில் தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் திரைப்படம் நடித்திருந்தாலும், சாய் பல்லவிக்கு பெருமளவு சிறப்பான கதாபாத்திரம் கிடைக்காத காரணத்தினால், நல்ல கதை களத்திற்காக காத்திருக்கிறார். அது சரி, சினிமாவில் கிளாமர் கூடாது என எண்ணினால் நடக்குமா ? ஒரு பாடலுக்கு மட்டும் கிளாமர் காட்டினாள் நீண்ட காலம் பயணம் செய்து விட முடியுமா ? தற்போது அதை சாய் பல்லவி புரிந்துகொண்டாரோ என்னவோ இயக்குனருக்கு இவ்வாறு கண்டிசன் போட்டுள்ளார்.

அதாவது திரை படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டும் படியான கேரக்டர்கள் தான் தனக்கு வேண்டும், எனவும் அதை தான் தன ரசிகர்கள் விரும்புவார்கள் எனவும் கூறியுள்ளாராம் சாய் பல்லவி. எனவே,இயக்குனர்கள் அப்படி ஏதாவது கதை இருந்தால் மட்டும் சொல்லுங்க என ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாராம் .

Published by
sam

Recent Posts