Connect with us

Cinema News

தியேட்டரில் செம அடி போல!.. அதிரடியாக ஓடிடிக்கு வரும் பிரபாஸின் சலார்.. அதுவும் இவ்ளோ சீக்கிரமா?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் ஒரு மாதத்திற்கும் முன்னதாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்திய சினிமாக்கள் ரிலீஸ் செய்யப்பட்டு 4 வார இடைவெளியில் ஓடிடிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதே பாலிவுட் படங்கள் 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வருகின்றன.

இந்நிலையில், பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் 3 வாரத்திற்குள் ஓடிடிக்கு ஓடி வரப் போகிறது என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: செந்தூரப்பாண்டியை பார்க்க வந்த தம்பி விஜய்!.. அந்த 10 செகண்ட் கடைசியா பார்த்து கண் கலங்கிட்டாரே!

பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், மைம் கோபி, ராமசந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் 4 வருஷம் உழைப்பில் உருவான சலார் திரைப்படம் 4 வாரங்கள் கூட தியேட்டரில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிடிக்கு வரப் போகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சலார் திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகப் போவதாக கூறுகின்றனர். சுமார் 160 கோடிக்கு சலார் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சீக்கிரமே ரிலீஸ் செய்வதற்காக வாங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: புரமோஷனுக்கு மட்டும் டிவிட் போடும் விஜய்!.. விஜயகாந்துக்கு வாயவே தொறக்கலயே!..

ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. நெட்பிளிக்ஸ் ரிலீஸ் பட்டியலில் சலார் முதல் பாகம் இடம்பெற்றிருப்பதாக கூறுகின்றனர். 4 வாரங்கள் இடைவெளி என்றால் சலார் திரைப்படம் அதிகபட்சமாக ஜனவரி 21ம் தேதி வெளியாக வேண்டும். 21ம் தேதியை 12 என மாற்றி விட்டார்களா? என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top