Connect with us
salman

Cinema News

காப்பாற்ற நினைத்தேன் கடித்துவிட்டது – பாம்பு கடித்தது குறித்து சல்மான் கான்…!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனக்கு பாம்பு கடித்தது குறித்து கூறியுள்ளதாவது,

இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். இவர் நடிப்பையும் தாண்டி மிகச்சிறந்த காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்றெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். அதே போல் தனது சினிமா துறையை தாண்டியும் அவர் விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வெல் இடத்தில் உள்ள இவரது பண்ணை வீட்டில் விவசாய வேலைகள் செய்த வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணிக்கு பண்ணை வீட்டில் சல்மான் கானை பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படியுங்கள்: அடிச்சு தூக்கும் அதுல்யா… எல்லாரும் காலி – இதை கொஞ்சம் பாருங்க!

அது விஷமில்லாத பாம்பு என்பதால் அவர் உடலுக்கு எந்த கேடும் இல்லை. இந்நிலையில் தனக்கு பாம்பு கடித்தது குறித்து மனம் திறந்துள்ள நடிகர் சல்மான் கான், ” என் பண்ணை வீட்டில் நேற்று இரவு பாம்பு ஒன்று உள்ளே நுழைந்தது. நான் ஒரு குச்சியில் அதை எடுத்து வெளியே விட முயன்றேன்.

அப்போது அது என்னை கடித்துவிட்டது. தொடர்ந்து மூன்று முறை என்னை கடிதத்தில் நான் அடுத்த 6 மணி நேரம் சிகிச்சை பெற்றேன். ஆனால், அதிர்ஷடவசமான் எனக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நான் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இப்போது நலமாக இருக்கிறேன் என கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top