Categories: Cinema History

என்ன சமந்தா ரௌடிங்க கூடதான் ஜோடி போடுவீங்க போல.! உதட்டை பத்திரமாக பாத்துக்கோங்க.!

தென்னிந்திய சினிமா நடிகைகளில் மிக முக்கிய நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் அந்த மணவாழ்வில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்தார்.

தற்போது சினிமாவில் மீண்டும் பரப்பாக இயங்கி வருகிறார். புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஊ சொல்றியா ஊஊ சொல்றியா பாடல் தற்போது வரையில் ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருக்கிறது.

இதையும் படியுங்களேன் – சிவகார்த்திகேயனின் புது ஹீரோயின் பெயரை சரியாக சொன்னால் பரிசு கொடுப்பாங்க போல.!

அது மட்டுமல்லாது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிக்க உள்ளார். ஏற்கனவே, சூப்பர் டீலக்ஸ், தி பேமிலி மென் சீசன் 2ஆகிய சவாலான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்திருந்தார் சமந்தா

இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார். விஜய் தேவரைக்கொண்டா படத்தில் நடித்தால் கண்டிப்பாக ஹீரோயினுடன் நெருக்கமான காட்சி இருக்கும். கண்டிப்பாக ஒரு லிப்லாக் முத்தக்காட்சி இருக்கும்.

அதே போல, சமந்தாவுக்கு முத்தம் கொடுப்பாரா விஜய் தேவரகொண்டா அல்லது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஏதேனும் கதாபாத்திரம் கொடுக்கப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Manikandan