Cinema News
ஆடை வடிவமைப்பளாருடன் சமந்தா நெருக்கம் – கதை கட்ட ஆரம்பித்த நெட்டீசன்கள்
நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரிமேக்கில் நடித்தது முதல் காதலிக்க துவங்கினர் பின்னர் இருவரும் 8 வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்துக்கொண்டனர். மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் சண்டை, கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் விவகாரம் முற்றிப்போக சமந்தாவின் குடும்பத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியடைவே இருவரும் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இருவரின் விவாகரத்துக்கு சமந்தாவின் நன்னடத்தை தான் காரணம் என தெலுங்கு மீடியாக்கள் , சில ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆம், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ப்ரீதம் ஜுகல்கர் உடன் சமந்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டீசன்கள் சமந்தா விவாகரத்திற்கு இவர்தான் காரணமா என்று கதை கட்ட ஆரம்பித்துவிட்டனர். இருந்தும் இது உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கூட இதே போன்று நாக நாகசைதன்யாவுக்கும் சாய்பல்லவிக்கும் காதல் உறவு இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.