நான் செத்து போயிருப்பேன்... சமந்தாவுக்கு எமனாக மாறிய விவகாரத்து முடிவு!

samantha
விவாகரத்தால் இறந்துவிடுவேன் என நினைத்தேன் என்று சமந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் , ஹெளுக்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு வாரிசு நடிகர் நாக சைதன்யாவை 8 ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணம் 4 ஆண்டிற்குள் முடிவிற்கு வந்துவிட்டது.
சமந்தாவின் நடவடிக்கைகள் கணவர் நாக சைதன்யாவிற்கு பிடிக்காததால் விவகாரத்து முடிவு எடுத்ததாக மீடியாவில் செய்திகள் வெளியானது. இந்நிலையில் விவகாரத்து முடிவு தனக்கு எப்படிப்பட்ட மன வருத்தத்தை கொடுத்தது என்பது குறித்து சமந்தா வெளிப்படையாக கூறியிருக்கிறார். என் விவாகரத்து முடிவு என்னை மிகவும் பலவீனப்படுத்தி என்னை மனம் குலைய செய்யும் என நினைந்து மிகவும் பயந்தேன்.

samanthaa
இதையும் படியுங்கள்: தெரியாம உளறிட்டேன்… தப்ப புரிஞ்சிக்கிட்டாங்க!….அஸ்வின் விளக்கம்…
ஆனால், அதில் இருந்து வெளியில் வர என்னை நான் முழுமையாக தயார் செய்து பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன். இந்த முடிவு என்னை கொன்று விடும் என நினைத்தேன். ஆனால், நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை எனக்கு காட்டியதே இது தான். என்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என மிகுந்த மன தைரியதுடன் கூறினார்.