விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

தமிழக வெற்றி கழகம் இது அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்களை எங்கு பார்த்தாலும் செய்தியாளர்கள் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிலர் அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், பலர் நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்று தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கப் போவதாகவும் அந்தப் படத்தை மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தை இயக்கிய திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அந்த நைட்ல அப்படி பண்ணியிருக்க கூடாது.. நானும் நிக்‌ஷனும் அப்படித்தான் இருந்தோம்! ஐஸு சொன்னத கேளுங்க

தென்காசி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று நடிகர் சமுத்திரகனியை சந்தித்த செய்தியாளர்கள் குறித்து கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் நல்ல மனிதர்கள் அரசியல் செய்ய வருகிறார். அவருக்கு எப்போதுமே எனது முழு ஆதரவு இருக்கும். தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

நடிகர் விஜய் உங்களை அரசியலுக்காக பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்கிற கேள்விக்கு, அவர் என்னை கூப்பிடலன்னா கூட நல்ல விஷயத்துக்காக நானே முதலில் செல்வேன் என வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

இதையும் படிங்க: சாதிக்குமா சைரன்!.. அடேங்கப்பா இத்தனை தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதா?.. சோலோவாக கல்லா கட்டுவாரா ஜெயம் ரவி?

முன்னதாக நடிகை வார்னிங் போஜனிடம் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விகளை எழுப்பினர். விஜய்க்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என அவரும் விஜயின் அரசியல் உரிமையை வரவேற்று இருந்தார்.

 

Related Articles

Next Story