சஞ்சயால இயக்குனராலாம் நிலைக்க முடியாது… இதுதான் அவருக்கு செட் ஆகும்…

கோலிவுட் டாப் ஸ்டார் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை திடீரென இயக்குனராக லைகா களமிறக்கியது. பெரிய நடிகரின் மகன் என்றால் அவரும் நடிகராக தான் மாறுவர் என்று இருந்த நிலையை தாண்டி தற்போது ஜேசனின் இயக்குனர் எண்ட்ரி பலதரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

முன்னணி ஸ்டார் நாயகர்களின் மகன்கள் எப்போதுமே நடிகனாக மாறுவார்கள். இதில் யாருமே விதிவிலக்கு இல்லை. சூர்யா, கார்த்தி, கவுதம் கார்த்தி, துருவ் விக்ரம் வரை பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் விஜயின் மகனும் நடிகனாக தான் வருவார் என்றே கோலிவுட் வட்டாரம் நம்பி வந்தது.

இதையும் படிங்க: ஒரு படம் ஹிட் அடிச்சா இப்படியா!. வேற லெவலில் சம்பளம் கேட்கும் ரஜினி!. கையை பிசையும் தயாரிப்பு நிறுவனம்..

இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட பல இயக்குனர்கள் ஜேசனை தங்கள் படங்களில் அறிமுகம் செய்ய வைக்க வேண்டும் என்று விஜயிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் விஜய் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் ஜேசனுக்கு நடிக்க பிடிக்கவில்லை. சார் அவன் இயக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

ஆனால் இயக்குனர்களோ சார் நாங்க கதை சொல்லி பார்க்கிறோம். அவங்களுக்கு பிடிக்கலாம் தானே எனக் கேட்டு இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த பிரச்னையை ஜேசனே சமாளிக்க வேண்டும் என்ற முடிவில் அவரிடம் கதை சொல்லுங்கள் என அனுப்பி விட்டாராம்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

அவர்கள் சொன்னதை பொறுமையாக கேட்ட ஜேசன் சார் அங்கிள் எனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டாராம். இந்த நிலையை அடுத்து தான் இயக்குனராக போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. சமீபத்திய பேட்டியில் எஸ்.ஜே.சூர்யாவிடம் ஜேசன் இயக்குனர் ஆவதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, எனக்கு ஜேசன் நடிகனாக வேண்டும் என்று தான் ஆசை. இயக்கம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம். சொல்ல முடியாது அமீர்கான் கூட முதலில் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டு தான் பின்னர் நடிகராக ஆனார். அதனால் ஜேசனும் நடிக்கலாம். அதற்கு நான் விரும்புகிறேன். ஆனால் அவரின் எண்ணம் எப்படி என்பது அவருக்கே வெளிச்சம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story