தியேட்டர்ல அந்த சீனை பார்த்து அழுதுட்டேன்!.. குணா பட இயக்குநர் ஏஜென்ட் உப்பிலியப்பன் பேட்டி!..

விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பன் கதாபாத்திரத்தில் நடித்த சந்தான பாரதியை பலருக்கும் கமல்ஹாசன் படத்தில் நடித்த துணை கதபாத்திரமாகத்தான் தெரியும். ஆனால், அந்த காலத்து ஆட்களுக்குத்தான் அவர் குணா மற்றும் மகாநதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் என்று தெரியும்.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ஒரு வாரத்தில் 50 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழ்நாட்டிலேயே நல்ல வசூலை ஈட்டி லேட்டஸ்ட் ரிலீஸ் கோலிவுட் படங்களுக்கு ஆப்படித்துள்ளது.

இதையும் படிங்க: வ்ரூம்.. வ்ரூம்!.. நானும் அஜித் போல ஒரு வேர்ல்ட் டூர் போயிட்டு வரேன்!.. பைக் எடுத்த ரஜினிகாந்த்!..

இந்நிலையில், சென்னைக்கு மஞ்சுமெல் பாய்ஸ் டீம் வந்து மேலும் படத்தை தமிழ்நாட்டில் புரமோட் செய்து வருகின்றனர். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களை மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் மற்றும் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

கமல்ஹாசன் அந்த குழுவினரை சந்திக்கும் போது மறக்காமல் தனது நண்பரும் குணா படத்தின் இயக்குநருமான சந்தான பாரதியை அழைத்துச் சென்றார். அந்த படத்திற்கு கதை, திரைக்கதை எல்லாம் எழுதியது கமல்ஹாசன் என்றாலும் இயக்கியது சந்தான பாரதி தான்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இடத்தை ராஷ்மிகா மந்தனா பிடிச்சிடுவாரு போல!.. இனிமே அவர் நேஷ்னல் கிரஷ் இல்லை!..

இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து விட்டு தியேட்டரிலேயே அழுது விட்டேன் என்றும் குறிப்பாக கிளைமேக்ஸில் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்கிற பாடலை இயக்குநர் சிதம்பரம் கச்சிதமாக வைத்து புல்லரிக்க வைத்து விட்டார் என குணா படத்தின் இயக்குநர் பாராட்டியுள்ளார்.

 

Related Articles

Next Story