Connect with us
sarath

Cinema News

ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி

Actor Sarathkumar: தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். சுப்ரீம் ஸ்டாராக பல ஆண்டுகளாக இந்த துறையில் ஜொலித்து வருகிறார். அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். கிட்டத்தட்ட 140 படங்களுக்கு மேல் நடித்து தவிர்க்க முடியாத நடிகராகவும் இருந்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் இன்றளவும் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராகவும் இருந்த சரத் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக என பன்முகம் கொண்ட கலைஞராகவும் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.

தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் சரத் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முன் சாயாதேவி என்ற பெண்ணை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். கூடவே பூஜா என்ற மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில் சரத்குமாருக்கும் சாயாதேவிக்கும் இடையே கருத்துவேறு பாடு ஏற்பட அவர்கள் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர். அதன் பின்னரே ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: முதல் மனைவி மகள்களை டாக்டராக்கிய விஜயகுமார்… மஞ்சுளா மகள்களுக்கு செய்த துரோகம்… வசைப்பாடும் பிரபலம்

அதாவது சரியான காரணத்திற்காக மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மனதளவிலும் சரி உடலளவிலும் சரி நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த பயணத்தில் இருவருமே சந்தோஷமாக பயணிக்க வேண்டும். திருமணம் என்பது உடல் தேவைக்காக மட்டுமே கிடையாது. அதுமட்டுமில்லாமல் தெளிவாக இல்லாத போது விவாகரத்து என்பது மனதளவிலும் உடல் அளவிலும் என நிறையவே பாதிப்பை ஏற்படுத்தும் என பல விஷயங்களை பகிர்ந்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top