Vijayakanth: சரத்குமாருக்காக படத்தையே நிறுத்திய கேப்டன்! விஷயத்தை கேட்டதும் ஷாக்கான சண்முக பாண்டியன்

Published on: December 10, 2025
sarath (1)
---Advertisement---

கொம்புசீவி புரோமோஷன்:

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புச்சீவி படத்தின் புரோமோஷன் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் கொம்புச்சீவி படத்தின் புரோமோஷனில் சரத்குமார் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக விஜயகாந்த் பற்றி நிறைய விஷயங்களை பேசியுள்ளார் சரத்குமார்.

ஆரம்பகாலங்களில் சரத்குமாரின் கலையுலக பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த். ஒவ்வொரு முறை சரத்குமார் சரிவை எதிர்நோக்கும் போதும் அவருக்கு கைக் கொடுத்து தூக்கி விட்டவரும் விஜயகாந்த்தான். ஒரு சப்போர்ட் சிஸ்டமாகத்தான் விஜயகாந்த் இருந்திருக்கிறார். புலன் விசாரணை படத்தில் தான் விஜயகாந்தை முதன்முதலாக சரத்குமார் சந்திக்கிறார்.

விஜயகாந்திடம் கற்றுக் கொள்ள வேண்டியது:

அந்த படத்திற்காக சரத்குமாரின் மேக்கப்புக்கு விஜயகாந்த் தன்னுடைய மேக்கப் உதவியாளர் அர்ஜூன்கிட்ட அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். விஜயகாந்தை பொறுத்தவரைக்கும் ஒரு இயக்குனருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். அதை விஜயகாந்திடம் இருந்து பல பேர் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். புலன் விசாரணை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதன் பிறகு மீண்டும் கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமாரும் விஜயகாந்தும் சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படத்தின் போது சரத்குமாருக்கு ஒரு மேஜர் ஆக்ஸிடெண்ட் நடக்க கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி விட்டார்களாம். கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமார்தான் நடிக்க வேண்டும் என விஜயகாந்த் சரத் மீண்டு வரும் வரை ஆறு மாதம் காத்திருந்து கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்திருக்கிறார்.

சிபாரிசு செய்வார்:

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படியொரு நடிகர்கள் இருப்பார்களா என்று சரத்குமார் கூறினார். மேலும் நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் தலைவராக இருக்கும் போதும் இருவருக்குமிடையே நல்ல ஒரு நட்பு இருந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துக்கு இயக்குனர்கள் ஒரு கதை சொல்ல போகிறார்கள் என்றால் அந்தக் கதை அவருக்கு செட் ஆகுதோ இல்லையோ? ஏய் இது சரத்குமாருக்கு செட் ஆகும்ப்பா என்று சொல்லி இவரிடம் அனுப்பி வைப்பாராம்.

அப்படி பல படங்கள் என்னை தேடி வந்திருக்கின்றன. எனக்கும் போன் செய்து விஜயகாந்த் சொல்லிவிடுவார் என்று சரத்குமார் கூறினார். அன்றைய காலகட்டம் ஒரு கோல்டன் ப்ரீயட் என்றும் பழைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சரத்குமார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.