நடிகையின் வீடியோ! போட்டு போட்டு பார்த்த சரத்குமார் - படப்பிடிப்பில் நடந்த கிளுகிளுப்பு

sarath
தமிழ் சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். நடிகர் என்பதையும் தாண்டி ஒரு அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரத்குமார் முதன்முதலாக ஹீரோவாக நடித்த படம் சூரியன். அந்தப் படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

sarath1
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன சரக்குமார் இரண்டாவதாக நடிகை ராதிகாவை திருமணம் செய்து தன் இல்லற வாழ்க்கையை சுமூகமாக நடத்தி வருகிறார். இவருடைய சினிமா கரியரில் புலன்விசாரணை, சேரன் பாண்டியன், சூர்யவம்சம், நாட்டாமை, ஐயா போன்ற நல்ல படங்கள் இவரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமைந்தன.
90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த சரத்குமார் சமீப காலமாக ஒரு சிறந்த குணசித்திர நடிகராக திகழ்ந்து வருகிறார். ஒரு அப்பாவாக அண்ணனாக என பல பரிமாணங்களில் தன்னுடைய குணச்சித்திர கதாபாத்திரத்தை திறம்பட செய்து வருகிறார்.

sarath2
இந்த நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து இருந்தார். அப்போது அந்த விழாவை தொகுத்து வழங்கியவர் பிஜே அஞ்சனா மற்றும் பிக் பாஸ் பிரபலம் அபிஷேக்.
அபிஷேக்கை பற்றி பலருக்கும் தெரியும் .சகட்டுமானக்கி அனைவரையும் தன் கேள்விகளால் வச்சு செய்யக் கூடியவர். அதே மாதிரியான ஒரு செயலை தான் அந்த விழா மேடையிலும் செய்து கொண்டு வந்தார் .அப்போது மேடையில் பேசிய சரத்குமார் வெங்கட் பிரபுவை பார்த்து" ஏன் இவனை இந்த விழாவிற்கு கூட்டிட்டு வந்தீங்க? என கேட்டார்.

sar
அது மட்டும் இல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டிலும் எங்கள் யாரையுமே இவன் நடிக்கவும் விடல என்று கூறினார். அதைக் கேட்டதும் அபிஷேக் "படப்பிடிப்பில் நீங்களும் நானும் அர்ஜுனா அர்ஜுனா பாடல் வீடியோவை போட்டு போட்டு பார்த்தோம் ஞாபகம் இருக்கிறதா? சொல்லவா சொல்லவா?" என்று சரத்குமாரை கிண்டலாக மிரட்டினார். அந்த பாடல் சரத்குமார் , நமீதா நடிப்பில் வெளிவந்த ‘ஏய்’ என்ற படத்தில் அமைந்த ஒரு க்ளாமரான பாடலாகும். அந்த பாடலில் சரத்குமாரும் நமீதாவும் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார்கள். அந்தப் பாடலைத்தான் இடைவேளை சமயத்தில் போட்டு போட்டு பார்த்ததாக அபிஷேக் கூறினார். அதை கேட்டதும் சரத்குமார் வாயை மூடிக் கொண்டார்.
இதையும் படிங்க : சிவாஜி மாதிரி கூட இமிடேட் பண்ணிரலாம்! ஆனா இவர மாதிரி முடியவே முடியாது – யாருனு தெரியுமா?