More
Read more!
Categories: latest news television

சரிகமப டைட்டில் வின்னர்!.. 10 லட்சம் ரூபாயை தட்டித் தூக்கிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா?..

ஜீ5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில்,  அதில் இறுதிச்சுற்றுக்கு மொத்தமாக 6 பேர் தகுதியடைந்து பங்கேற்று இருந்தனர்.

பாடகர் ஸ்ரீனிவாஸ், நடிகை அபிராமி உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்ற இந்த சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சியை பிக் பாஸ் அர்ச்சனா மற்றும் ஆர்ஜே விஜய் தொகுத்து வழங்கினர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..

யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றியாளரை அறிவித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நடைபெற்று வருவது போல ஜீ5 தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சி 3வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடைசியாக இறுதிச்சுற்று வரை முன்னேறிய 6 போட்டியாளர்களில் 4 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ஏன்டா இப்படி பண்ணிட்டீங்க.. மனசு உடைந்து திடீரென கதறி அழுத மீசை ராஜேந்திரன்!.. ஏன் தெரியுமா?..

3வது ரன்னர் அப் விருதை ரிக்‌ஷிதா வென்றார். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 2வது ரன்னர் அப்பாக வந்த சஞ்சனாவுக்கு பாடகர் கார்த்தி 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்.

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியில் முதல் ரன்னர் அப்பாக ருத்ரேஷ் எனும் சிறுவன் வெற்றிப் பெற்ற நிலையில், அவனுக்கு 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கடைசியாக டைட்டில் வின்னராக அதிக ஓட்டுக்களுடன் மக்கள் மனதையும் சரிகமப நிகழ்ச்சியின் இந்த சீசனையும் இலங்கையை சேர்ந்த கில்மிஷா என்பவர் வென்ற நிலையில், அவரது பெற்றோர்கள் மேடைக்கு ஓடி வந்து மகளை வாழ்த்தினர். யுவன் சங்கர் ராஜா டைட்டில் வின்னரை அறிவித்து அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசை வழங்கி வாழ்த்தினார்.

Published by
Saranya M

Recent Posts