எனக்கு இது செட் ஆகாது!. பாக்கியராஜ் பட கதையை ரிஜெக்ட் பண்ண அந்த நடிகர்!…

by சிவா |   ( Updated:2025-04-29 06:03:54  )
k bhagyaraj
X

k bhagyaraj

தமிழ் சினிமாவில் திரைக்கதை மன்னன் என எல்லோராலும் அழைப்படுபவர்தான் கே.பாக்கியராஜ். இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக வேலை செய்து சினிமா கற்றுக்கொண்டவர். துவக்கத்தில் தனது குரு பாரதிராஜாவின் படங்களின் கதை, திரைக்கதைகளில் பணியாற்றி வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததே இல்லை.

ஆனால், தான் இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜை நடிக்க வைத்து அவரை ஹீரோவாக மாற்றியது பாரதிராஜாதான். அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களை தானே இயக்குவார். பாக்கியராஜின் படங்களுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.

பாக்கியராஜ் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சி, தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி போன்ற படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. ரஜினி, கமல் படங்களை விட பாக்கியராஜ் படங்களுக்கு பெண்கள் கூட்டம் அலை மோதியது. பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்திருக்கிறார். பல இயக்குனர்களும் கதை, திரைக்கதையில் குழப்பம் எனில் உதவி கேட்டது பாக்கியராஜிடம்தான்.

இவர் படங்களில் ஹைலைட்டாக அமைந்தது ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சி படம்தான். இந்த படத்தில்தான் ஊர்வசி அறிமுகமானார். இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழகத்தில் பல தியேட்டர்களிலும் 125 நாட்களுக்கும் மேல் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக முந்தானை முடிச்சி அமைந்தது.

sasikumar 1
sasikumar 1

பாக்கியராஜின் எந்த கதையையும் யாருமே இதுவரை ரீமேக் செய்து நடிக்கவில்லை. ஏனெனில், பாக்கியராஜ் ஏற்று நடித்த வேடங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும். சில வருடங்களுக்கு முன்பு முந்தானை முடிச்சி படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதில், சசிக்குமார் ஹீரோவாக நடிக்கிறார் என செய்திகள் வெளியானது.

ஆனால், அதன்பின் அதுபற்றிய செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த கதையில் நடிப்பது பற்றி மீண்டும் மீண்டும் யோசித்த சசிக்குமார் இந்த கதை தனக்கு செட்டே ஆகாது என ஒதுங்கிக் கொண்டாராம். அதனால்தான் அப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Next Story