பிரம்மாண்ட வரலாற்று கதையை விஜய்க்கு சொன்னேன்.. இதனால் நடக்கலை… ஃபீல் பண்ணும் சசிகுமார்

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு பிரபல இயக்குனரான சசிகுமார் கதை சொல்லியதாக தகவல்கள் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றெடுக்கிறார். அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பல பிரபலங்கள் ஒப்புக்கொண்டாலும் ரஜினிகாந்தை விட அதிகமான அளவு சம்பளம் வாங்குவது தற்போது விஜய் தான்.

இதையும் படிங்க:நடிகர்களில் தி பெஸ்ட் அஜித்தான்! யார்கிட்டயும் இல்லாத ஒரு குணம்.. பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்

அவர் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களுமே 300 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தின் வசூல் 800 கோடி வரை நெருங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட கோலிவுட்டின் அடையாளமாக மாறி இருக்கிறார் விஜய்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்து தளபதி 69ல் நடிக்க இருக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: என்னையே கேட்ட பிரபல இயக்குனர் அந்த நடிகையுடன் படுக்கையில் ஓவர் டோஸில் இறந்தார்… நடிகை ஷாக்

இந்நிலையில் நடிகர் விஜயிடம் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் கதை ஒன்றைக் கூறியதாக தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர் கூறும் போது, 2015 ஆம் ஆண்டு விஜய் சாரை சந்தித்து அவருக்கு வரலாற்று கதை ஒன்றை கூறினேன். அது மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக அமைய இருந்தது.

அந்த திரைப்படத்தில் நடிக்க விஜய் சாருக்கும் அதீக விருப்பம் இருந்தது. ஆனாலும் அப்படத்தின் பட்ஜெட் பல தயாரிப்பாளர்களை பயம் கொள்ள வைத்தது. அது மட்டுமல்லாமல் தற்போது இருப்பது போல கிராபிக்ஸ் மற்றும் பிஎப்எக்ஸ் பெரிய அளவில் அந்த நேரத்தில் இல்லை. இதனாலே அப்படம் நடக்காமல் போனதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles
Next Story
Share it