இப்ப விஜய் இல்ல.. அஜித்துக்கு மார்க்கெட் இல்ல!.. பிரபலம் பேட்டி!….

Published on: February 3, 2026
vijay
---Advertisement---

நடிகர் அஜித்தும் விஜயும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான்.. அஜித் சாக்லேட் பாய் லுக்கில் ரசிகர்களை இழுத்தால் விஜயோ தனது நடனத் திறமை மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.. இருவருமே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து படிப்படியாக ஆக்சன் ரூட்டுக்கு மாறினார்கள்.. அதேபோல் ஒரு கட்டத்தில் இருவருமே மாஸ் நடிகர்களாகவும் மாறினார்கள்..

பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்களை அஜித் பயன்படுத்திக்கொண்டார். அதேபோல் பகவதி, திருமலை போன்ற படங்களை விஜய் பயன்படுத்திக் கொண்டார்.. விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தெரிந்து அதற்கேற்ப சம்பளம் வாங்கினார் அஜித். எனவே விஜயை வைத்துதான் அஜித்துக்கு சம்பளம் என்கிற நிலையும் சினிமாவில் உருவானது..

ஏனெனில் விஜயின் போட்டி நடிகராக அஜித் திரைத் துறையில் வலம் வந்தார்.. ஆனால் தற்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார்.. இந்நிலையில்தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. ஏனெனில் அஜித் 185 கோடி சம்பளம் கேட்கிறார். அதை கொடுக்க யாரும் முனவரவில்லை. அவர் தயாரிக்கிறார்.. இவர் தயாரிக்கிறார்.. என சமீப காலமாக செய்திகள் வெளியானாலும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.. அஜித்தின் புதிய படத்தை தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முன் வந்தாலும் ‘அஜித்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது. இவ்வளவு கோடி அட்வான்ஸ்.. லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு’ என்றுதான் பேசுகிறார்களாம்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ‘விஜய் சினிமாவில் இருந்த வரைக்கும்தான் அஜித்துக்கு மார்க்கெட் இருந்தது.. விஜயின் போட்டி நடிகர் என சொல்லி அவரும் ஒரு ரசிகர் கூட்டத்தை திரட்டினார்.. தற்போது அஜித்தின் படத்தை தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் கூட முன்வரவில்லை’ எனக் கூறியிருக்கிறார்..