எங்க படத்த சுட்டு எங்களுக்கே அனுப்புவீங்களா.?! ஆஸ்கரை அதிரவைத்த தமிழ் சினிமா.!

Published on: January 24, 2022
---Advertisement---

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் ஆஸ்கர் விருது என்பது மிகவும் உயரிய கௌரவம் ஆகும். அந்த விருதை பெற ஒவ்வொரு கலைஞனும் எதிர்பார்த்து காத்து இருப்பான். அப்படி ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுத்து அனுப்பவே ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனி குழுவும் உண்டு.

அப்படி தமிழ்நாட்டில் இருந்து நிறைய படங்கள் ஆஸ்கர் பரிந்துரைக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன கமலஹாசனின் திரைப்படம் அதிக அளவில் இருந்துள்ளதாம். அந்த வகையில் தேவர்மகன், நாயகன், இந்தியன் போன்ற படங்கள் ஆஸ்கார் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில், நாயகன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். அதில் கமல்ஹாசன் தலை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் உண்மையில் வேலு நாயக்கர் ஆகத்தான் கமல் நமக்குத் தெரிவார் அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றுபட்டு நடித்திருப்பார். அதன் காரணமாக ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

இதையும் படியுங்களேன்… மொத்த கதையையும் மாத்திட்டார் கமல்!.. பல வருடம் கழித்து இயக்குனர் பேட்டி….

உண்மையில், அந்த திரைப்படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான “தி காட்பாதர்” எனும் ஆங்கில திரைப்படத்தின் கதை ஆகும் இதனை காரணம் காட்டி நேரடி தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் நாயகன் படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆஸ்கர் குழு நாயகனை நிராகரிப்பதாக அப்போது  தெரிவித்தது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment