என் புருஷன நான் கொன்றேனா? சீரியல் நடிகையின் வாழ்க்கையில் நடந்தது என்ன?

by Rohini |
banu
X

banu

Serial Actress Banumathy: எங்க அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பானுமதி. இவர் தற்போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை பற்றி பல பேட்டிகளில் கூறி வருகிறார் .அதுதான் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

நடிப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது டான்ஸ் ஷோக்களுக்கும் சென்று நடனமாடி வருகிறாராம் பானுமதி. அப்படி 15 வயதில் ஒரு ஷோவில் நடனம் ஆடும் போது அவருடைய கணவரான டான்ஸ் மாஸ்டர் ஒருவர் பானுமதிக்கு ப்ரொபோஸ் செய்து அந்த வயதிலேயே திருமணமும் நடைபெற்றது.

15 வயதில் திருமணம் ஆனபோது தனக்கு வெளிஉலகை பற்றி எதுவும் தெரியாது எனவும் குடும்பம் என்றால் என்ன குழந்தை என்றால் என்ன என்பது பற்றி எதுவுமே தெரியாத போது எப்படியோ பத்து வருடம் கணவருடன் குடும்பத்தை நடத்தி விட்டேன். 10 வருடத்திற்கு பிறகு என் கணவருக்கு மஞ்சள் காமாலை வந்து அவர் இறந்து போக அப்பொழுதுதான் வெளி உலகமே என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…

அந்த நேரம் அவரின் கணவர் வீட்டில் பானுமதிதான் அவருடைய கணவரை கொன்றார் என்றெல்லாம் பழி போட்டார்களாம்.அதனால் கணவர் வீட்டு உறவினர்களே வேண்டாம் என வந்து விட்டாராம்.அவருக்கு இரு மகன்களாம். இப்போது வரை தனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி யாருக்குமே தெரியாதாம். ரகசியமாக வளர்த்து வந்தாராம் பானுமதி.

அதற்கான காரணம் வெளியில் போகும் போது பானுமதியும் அவருடைய மகன்களும் பார்ப்பதற்கு அக்கா, தம்பி மாதிரி இருப்பார்கள் என்றும் அதை வெளியாட்கள் பார்க்கும் பொழுது வேறு விதமாக விமர்சிப்பார்கள் என்ற காரணத்தினால் தான் தனக்கு மகன்கள் இருப்பதையே நான் மறைத்தேன் எனக் கூறியிருக்கிறார். இப்போது இரண்டு மகன்களில் ஒருவர் இன்ஜினியரிங் முடித்து வீட்டில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க: ரஜினி முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாத மனோரமா… சாதாரண பிரச்சனையா அது..!

இருந்தாலும் அவருக்கு இரண்டாவது திருமணத்திற்கான ஒரு ப்ரொபோஸ் வந்திருக்கிறது. அதை இவர் சம்மதமும் சொல்லி இருக்கிறார். ஆனால் ப்ரொபோஸ் செய்த நபர் இரண்டு மகன்களை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் குடும்பம் குழந்தை கணவர் என்றுதான் இருக்க வேண்டும். வெளியில் நடனம் ஆட போகக்கூடாது என்றெல்லாம் கண்டிஷன் போட்டாராம் .

இருந்தாலும் அவரை திருமணம் செய்து கொண்ட பானுமதி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அவரையும் பிரிந்து இப்போது தனியாக தன் அம்மா, தங்கை, மகன்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார். பல சீரியல்களில் நடித்து வரும் பானுமதி பெரும்பாலும் அம்மா அக்கா கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார்.

தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் போராட்டங்கள் இவைகளை எல்லாம் தாண்டி என் மகன்களை நான் நல்லபடியாக வளர்த்திருக்கிறேன். அவர்களை பெருமைப்பட வைக்க வேண்டும் என ஒரு மேடைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் செல்ல தயார் என்றும் பேசியிருக்கிறார் பானுமதி.

இதையும் படிங்க: எல்லாம் சூரி கால்ஷீட்டுக்காக!…கொட்டுக்காளி பாராட்டும் இயக்குனர்களை வெளுக்கும் பிரபலம்!..

Next Story