Connect with us
jaya

Cinema News

தொடக்கூடாத இடத்தில் தொட்டு.. ரெண்டு லட்சம் பேரம் பேசி! நடிகையின் வாழ்க்கையில் நடந்த அவலம்

Actress Jayalakshmi: சின்னத்திரையில் பெரும்பாலும் வில்லி கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயலட்சுமி. இவர்தான் இப்போது இந்த ஹாட் டாப்பிக்கை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பெண்களை பொறுத்தவரைக்கும் சினிமாவை தாண்டி பல்வேறு துறைகளிலும் அவர்களுக்கான தொல்லைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பெரும்பாலும் சினிமாவில் இருக்கும் நடிகைகள் அதை பற்றி வெளிப்படையாக தெரிவித்து விடுகின்றனர். ஆனால் மற்ற துறைகளில் இருக்கும் பெண்கள் அதை உள்ளுக்குள்ளேயே வைத்து மறைத்துவிடுகின்றனர்.

இதையும் படிங்க: பத்திக்கிட்டு எறியும் கோலிவுட் நெப்போட்டிசம்!… தனுஷின் மகனும் களமிறங்குகிறாரா? ஷாக் தரும் பிரபலம்…

வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற பல படங்களில் நடித்தவர் ஜெயலட்சுமி. சீரியல் பலவற்றிலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் பெண்களுக்கான பாலியல் தொல்லை குறித்தும் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதாவது பிரச்சினை நடக்கும் போது அமைதியாக இருந்து  கொண்டு அதன் பிறகு இந்த நடிகர்தான், இந்த இயக்குனர்தான் என்று சொல்வது சரியாக இருக்காது என கூறியிருக்கிறார்.

மேலும் யார் உங்களிடம் தவறாக நடக்கிறார்களோ உடனே அதை தட்டிக் கேளுங்கள். எனக்கும் அந்த மாதிரி நடந்தது. ஒருவரை பார்க்க சென்ற போது அந்த நபர் ஜெயலட்சுமியிடம் தொடக் கூடாத இடத்தில் தொட்டாராம். உடனே ஜெயலட்சுமி அந்த நபரை துரத்தி துரத்தி செருப்பால் அடித்தாராம்.

இதையும் படிங்க: சின்னக் கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடித்தது இப்படித்தான்!.. சுவாரஸ்யம் சொன்ன ஆர்.வி.உதயகுமார்…

அதே போல் ஒரு சமயம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற வகையில் ஒரு குறுஞ்செய்தி ஜெயலட்சுமிக்கு வந்ததாம். அதில் இருந்த மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது நடிகைகளின் படங்களை வைத்து  பேரம் பேசினார்களாம். ஜெயலட்சுமிக்கு இரண்டு லட்சம் தருவதாக அவருக்கே அவருடைய புகைப்படத்தை வைத்து பேசியிருந்தார்களாம். அதை கேட்டதும் ஜெயலட்சுமிக்கு ஷாக் ஆகிவிட்டதாம். இதை மிகவும் வருத்தத்துடன் கூறினார் ஜெயலட்சுமி.

google news
Continue Reading

More in Cinema News

To Top