Categories: latest news

கதவ மூடிட்டு அப்படி பண்ணுவாங்க! சீரியல் நடிகை பகிர்ந்த அதிர்ச்சி தகவல்

Serial Actress Nimeshika: பாலியல் ரீதியான பிரச்சனை பெரும்பாலும் சினிமா துறையில் நடிகைகளுக்கு நடந்து கொண்டே தான் இருக்கின்றன. சமீப காலமாக மலையாள சினிமா இந்த ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஹேமா கமிட்டி என்ற ஒரு அமைப்பின் மூலம் மலையாள சினிமாவில் ஏகப்பட்ட பல பெரிய பெரிய முன்னணி நடிகர்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிலர் பேர் மீது எஃப்ஐஆரும் போடப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முழு அறிக்கை ஹேமா கமிட்டி வெளிவிடவில்லை.

அதற்குள் இத்தனை பேரா என அனைவருமே ஆச்சரியப்பட்டு வருகின்றனர். முழு அறிக்கையும் வெளிவந்தால் ஒட்டுமொத்த மலையாள சினிமாவுமே மிகவும் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த கமிட்டியால் தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது .

இங்குள்ள பல முன்னணி நடிகைகள் தமிழ் சினிமாவிலும் இதேபோல் நிறைய பேர் இருக்கிறார்கள் என சூசகமாக பேசி வருகிறார்கள்.  ஹேமா கமிட்டி மாதிரி இங்கேயும் ஒரு கமிட்டி வரவேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் காரணமாக நடிகர் சங்கம் ஒன்று சேர்ந்து நடிகை ரோகினியை தலைமையாக வைத்து விசாக கமிட்டி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். இப்படி ஒரு சூழல் போய்க்கொண்டிருக்க இன்று ஒரு சீரியல் நடிகை பகிர்ந்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கண்ணான கண்ணே என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருபவர் நிமிஷிகா. சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் தான் கண்ணான கண்ணே .அதில் நடிகர் பப்லுவுக்கு மகளாக நடித்திருப்பார் நிமிஷிகா. அவர் சீரியலிலும் இந்த மாதிரி பிரச்சினைகள் நடப்பதாக பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுவும் ஒரு உயர்ந்த அத்தாரிட்டியில் இருப்பவர்கள் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள். சாதாரண உதவி இயக்குனர்களாக இருப்பவர்கள், லைட் மேன்கள் என இவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நான் கண் முன்னாலையே பார்த்திருக்கிறேன்.

ஒரு உதவி இயக்குனர் கதவை மூடிப்பார். ஆனால் உள்ளே ஒரு பெண் இருப்பார். அந்தப் பெண் வெளியே வரும்போது சில நேரங்களில் சிரித்துக் கொண்டு வருவார். ஏனென்றால் அந்த பெண்ணை எப்படியோ கன்வின்ஸ் செய்து அந்த உதவி இயக்குனர் அந்த காரியத்தை செய்து விடுவார்.

இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். அதனால் இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பள்ளியில் இருந்து கொண்டு வர வேண்டும் .குறிப்பாக ஆண்களுக்கு இதை போன்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்த பேட்டியில் நிமிஷிகா கூறியிருக்கிறார்

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago