Connect with us
ravi

latest news

ஒரே நேரத்தில் மூன்று பேரை ஏமாற்றிய சம்யுக்தா! வெளியான ஆடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சமீப காலமாக சின்னத்திரை காதல் சீரழிந்து கொண்டு வருகின்றது. ஏற்கனவே அர்ணவ் மற்றும் திவ்யா இவர்களின் பிரச்சனை சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே வகையில் மற்றும் ஒரு காதல் ஜோடியான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இவர்களின் பிரச்சினை பெரும் புயலை கிளப்பியுள்ளது. எட்டு மாதமாக காதலித்து கடந்த மார்ச் மாதம் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ravi1

vishnukanth

ஆனால் திருமணம் ஆகி ஒன்றரை மாதங்களிலேயே இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்களுக்குள்ள பிரச்சனையை இருவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஒரு ஆடியோவை பகிரங்கமாக வெளியிட்டு தன்னுடைய தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார். அதாவது சம்யுக்தா விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்னாடியே வேறு ஒருவரை காதலித்திருக்கிறாராம்.

யூடியூபில் “நிறைமாத நிலவே” என்ற ஒரு தொடரை நடத்தி வரும் ஒரு குழுவில் அந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்தவர் ரவி. அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் சம்யுக்தா. அப்போது இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்து இருக்கிறது. ஆனால் ரவி சம்யுக்தாவிடம் தவறாக நடக்க முயற்சித்து இருக்கிறார். அதனால் ரவியை சம்யுக்தா பிரிந்து விட்டாராம். இதை தன் நண்பர்களிடமும் தன் அம்மாவிடமும் சொல்லி அழுது இருக்கிறார் சம்யுக்தா. அப்போது சம்யுக்தாவையும் ரவியையும் சம்யுக்தாவின் வீட்டில் வைத்து விசாரித்து இருக்கின்றனர் .ஆனால் ரவி” தான் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை” என்றே புலம்பி இருக்கிறார்.

ravi2

vishnukanth sam

ஆனால் ரவி ஏற்கனவே மோசமானவன் என்பது தெரிய வர சம்யுக்தாவிடம் அவரது அம்மாவும் அவரது நண்பர்களும் இதைப்பற்றி சம்யுக்தா பெரிதாக நினைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக அவரின் மனதை மாற்ற முயற்சித்து வந்திருக்கின்றனர். இந்த நேரத்தில்தான் விஷ்ணுகாந்தின் அறிமுகம் கிடைக்க அவர் தன் காதலை சம்யுக்தாவிடம் சொல்லி இருக்கிறார் .மேலும் விஷ்ணுகாந்திற்கும் ஏற்கனவே ஒரு எக்ஸ் லவ் இருந்திருக்கிறதாம்
அதை சம்யுக்தாவிடம் விஷ்ணுகாந்த் சொல்லி இருக்கிறார்.

ஆனால் சம்யுக்தா ரவியை பற்றி எதுவுமே விஷ்ணுகாந்திடம் சொல்லவில்லையாம் .ஆனால் நானும் ரவியும் நண்பர்கள் என்பது மாதிரி தான் சொன்னாராம். இதே வேளையில் விஷ்ணுகாந்தை காதலிக்க ஆரம்பித்த பிறகும் கூட ரவியிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார் சம்யுக்தா. அது மட்டுமில்லாமல் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்பதைப் போல ரவியிடம் பேசிக்கொண்டே இருந்தாராம். ஒரு பக்கம் விஷ்ணுகாந்தின் லவ் மறுபக்கம் ரவியுடன் தொலைபேசி லவ் .இந்த மாதிரி பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் சம்யுக்தா.

இதையெல்லாம் தாண்டி சம்யுக்தாவிற்கு அண்ணன் மாதிரி ஒருவர் பேசிக் கொண்டிருக்க அந்த அண்ணனிடமும் சம்யுக்தா ரவியை பற்றி தவறுதலாக சொல்லிக் கொண்டே இருந்தாராம். ஆனால் அந்த அண்ணனிடம் நான் ரவியை லவ் பண்ணவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார். ஆனால் ரவியிடம் தொடர்ந்து காதல் மோகத்திலேயே சம்யுக்தா பேசிக் கொண்டே இருந்திருக்கிறார். இதைப் பற்றி அந்த அண்ணன் கேட்க அதற்கு சம்யுக்தா “என்னிடம் தவறாக முயற்சி செய்யவில்லை என்று சொன்னான் அல்லவா? அதை ப்ரூப் பண்றதுக்காகவே உண்மையை வரவழைப்பதற்காகவே நான் பழைய சம்யுக்தா மாதிரி அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் “என்று கூறினார்.

ravi

ravi

அ ப்போ இதையெல்லாம் விஷ்ணுகாந்திடம் சொல்லி இருக்க வேண்டியதுதானே? என்று அந்த அண்ணன் கேட்க, அதற்கு சம்யுக்தா “இதை எப்படி நான் அவரிடம் சொல்வேன்? காதலை பொருத்த வரைக்கும் ஆண் விஷயத்தில் வேறு பெண் விஷயத்தில் வேறு. அவர் அவருடைய காதலை சொன்னார். நான் சொன்னால் அது வேறு மாதிரி போய்விடும் என்பதற்காகவே நான் சொல்லவில்லை” என்று சம்யுக்தா சொன்னார். இதனால் கடுப்பாகிய அந்த அண்ணன் “அப்போ ஒரே நேரத்தில் எங்கள் மூன்று பேரையும் நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்” என்று கத்தி இனிமேல் என்னிடம் பேசாதே. நீ எத்தனை பேரை வேண்டுமானாலும் லவ் பண்ணிக்கோ. இது தான் நான் உனக்கு கடைசியாக செய்த போன் என்று வைத்து விட்டார்.

இதையும் படிங்க : அந்த பாட்ட ஓடி போய் மூச்சிறைக்க பாடினேன்!.. டி.எம்.எஸ். பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!..

இந்த ஆடியோவை வெளியிட்ட விஷ்ணுகாந்த் இனிமேல் எனக்கும் சம்யுக்தாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் என் குடும்பத்தாருக்கு ஏதாவது ஆனால் அது சம்யுக்தாவினால் மட்டுமே என்று கூறினார்.

google news
Continue Reading

More in latest news

To Top