Connect with us
gopi

latest news

திருமுருகன் கூட வொர்க் பண்ணும் போது இந்த கஷ்டத்தை அனுபவிச்சேன்! நாதஸ்வரம் ஹீரோயின் பளீச்

Actor Srithika: சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று நாதஸ்வரம். திருமுருகன் இயக்கி நடித்த அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்ற சீரியலாக அமைந்தது. அந்த சீரியலில் திருமுருகனுக்கு ஜோடியாக ஸ்ரீருதிகா நடிக்க கூடவே பிரபல சினிமா நடிகர் மௌலி மற்றும் பூவிலங்கு மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாதஸ்வரம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி 2015 ஆம் ஆண்டுதான் முடிவுபெற்றது. அதில் மலர் என்ற ஒரு அழகான கதாபாத்திரத்தில் ஸ்ரீருதிகா நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் கோபி கதாபாத்திரமான திருமுருகனுடன் ஸ்ரீருதிகாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ரசிக்கும் படியாக அமைந்தது. அந்த நேரத்தில் உண்மையிலேயே இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை கூட எழுப்பியது.

இதையும் படிங்க: இந்த புள்ளைக்கு ஒரு டிரெஸ் கொடுங்கடா!.. காஜி ரசிகர்களை ஜில்லாக்கும் யாஷிகா ஆனந்த்..

அந்தளவுக்கு காதல் காட்சிகளில் இருவரும் மிகவும் ஊன்றி நடித்திருந்தார்கள். இந்த நிலையில் ஸ்ரீருதிகா சானீஷ் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக தன் குடும்ப வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கையில் நாதஸ்வரம் சீரியலை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதாவது தன்னைப் பற்றி யாரும் எதுவும் தவறாக பேச முடியாது என்றும் அந்தளவுக்கு என் அம்மா என்னை வளர்த்திருக்கிறார் என்றும் வதந்திகள் வந்திருக்கலாம். ஆனால் என்னை பற்றி ஒரு தவறான கருத்தும் பதிவிட முடியாது என்று தன் மேல் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார் ஸ்ரீருதிகா.

இதையும் படிங்க: பிக்பாஸில் மட்டும் இல்ல வெளியேவும் தக் லைஃப் செய்த போட்டியாளர்!… இவரும் பிரதீப்புக்கு தான் சப்போர்ட்

நாதஸ்வரம் சீரியலில் நடிக்கும் போதுகூட திருமுருகன் என்னை இரண்டாவதாக கல்யாணம் செய்து கொண்டார் என்ற வதந்திகள் எழுந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில் அந்த வதந்தி என்னை மிகவும் பாதித்தது என்றும் அதன் பிறகுதான் பிரபலமாக இருக்கிற வரைக்கும் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ஸ்ரீருதிகா கூறினார்.

 

google news
Continue Reading

More in latest news

To Top