Ajith Sanjay: இன்று தமிழ் சினிமாவிற்கே தளபதியாக விளங்கும் விஜய் அடுத்ததாக அரசியலை நோக்கி நகர இருக்கிறார். அதனால் சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜயின் மகனான சஞ்சய் விஜய் அடுத்ததாக அவருடைய இன்னிங்ஸை ஆரம்பிக்க இருக்கிறார்.
ஏற்கனவே கனடாவில் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து தேர்ச்சி பெற்ற சஞ்சய் சில குறும்படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் லைக்காவுடன் தன் முதல் படத்திலேயே களமிறங்க காத்திருக்கிறார் ஜேசன் சஞ்சய். அது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.
இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?
சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரமும் அதிதி சங்கரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் அந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் மகன் இசையமைப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் படத்திற்கு பி.ஆர்.ஓவாக அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராதான் பணியாற்ற இருக்கிறாராம். இதனால் படக்குழு ஆரம்பத்தில் சுரேஷ் சந்திராவை அணுகிய போது முதலில் சுரேஷ் சந்திரா தயங்கினாராம். இதை அஜித்திடம் தெரிவிக்க அதற்கு அஜித் தராளமாக போய் பணியாற்றுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: என்ன நடிகன்னு நினைச்சியா!.. தப்பு செய்தவரை எட்டி உதைத்த எம்ஜிஆர்!. ராமாவரம் தோட்டத்து ரகசியங்கள்..
அதுமட்டுமில்லாமல் சஞ்சய்க்கு அஜித் தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது .அஜித்தை தொடர்ந்து அவரது மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித்தும் சஞ்சய்க்கு தொலைபேசி மூலமாக அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறாராம்.
ஏற்கனவே அஜித் குடும்பமும் விஜய் குடும்பமும் ஒரு நல்ல நெருக்கமான நண்பர்களாகவே பழகி வந்த நிலையில் இப்போது சுரேஷ் சந்திராவும் இந்த குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என்பதுதான் கூடுதல் தகவல்.
இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 6 பாட்டு!. 2 மணி நேரத்தில் ரெக்கார்டிங்!.. கமல் படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…