Connect with us
madi_main_cine

Cinema News

’அலைபாயுதே’ படப்பிடிப்பில் அஜித்தை நினைத்து உருகிய ஷாலினி..! உண்மையை கக்கிய மாதவன்…!

தமிழில் சினிமாவில் அழகான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு நாயகியாக சில வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் நடிகை ஷாலினி. நடிகர் அஜித்தும் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்து ஒரு உயரமான இடத்தை அடைந்துள்ளார்.

madi1_cine

இருவரும் அமர்க்களம் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். படம் முடிந்ததும் இவர்களது திருமணம் அரங்கேறியது. ஆனால் அதற்கு முன்பாகவே இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த அலைபாயுதே படத்தின் போதே அஜித் ஷாலினி காதலித்துக் கொண்டுதான் இருந்தனர்.

madi2_cine

அந்த படத்தின் போது மாதவனுக்கும் அப்பொழுதுதான் புதியதாக திருமணம் நடந்ததாம். ஷாலினியும் அஜித்துடன் காதலில் இருந்துள்ளார். அலைபாயுதே படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் ஷாலினியும் மாதவனும் நடிக்கும் போது ஷாலினி மிகவும் வருத்தப்படுவாராம்.

madi3_cine

ஷாலினி மாதவனிடம் இந்த காட்சியில் உனக்கு பதிலாக அஜித் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என அஜித்தை நினைத்து மிகவும் உருகுவாராம். இதை ஒரு பேட்டியில் மாதவனே வெளிப்படையாக தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top