Cinema News
நன்றி மறந்துவிட்டாரா ஷங்கர்.?! இந்த சினிமாவில் இதெல்லாம் ரெம்ப சாதாரணம்.!
தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே பிரமாண்ட இயக்குனர் என்றால் இயக்குனர் ஷங்கர் தான் நம் ஞயாபகத்துக்கு வருவார்கள். அந்தளவுக்கு அவரது திரைப்பட ப்ரமாண்டங்கள் நம்மை பிரமிக்க வைத்தள்ளன.
இவர் அறிமுகமான முதல் படமே அந்த நேரத்தில் பிரமாண்டம் தான். ஏனென்றால், ஒரு அறிமுக இயக்குனர். இந்த கதை வழக்கமாக இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் கதைதான். ஆனால், ஷங்கரின் காட்சியமைப்பு புதியதாக இருந்ததால் படத்தின் பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார்.
அதன் பிறகு ஷங்கரின் இரண்டாவது படத்தையும் பிரமாண்டமாக தயாரித்தார் கே.டி.குஞ்சுமோன். பிரபு தேவா கிட்டத்தட்ட புதுமுகம் தான். இந்து எனும் படம் மட்டுமே நடித்து வந்தார் பிரபு தேவா. பிரபு தேவாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தது கூட சியான் விக்ரம் தான். படமும் பெரிய வெற்றி பெற்றது.
இப்படி ஷங்கரின் முதல் இரண்டு படங்களையும் அவரது விருப்பப்படி எடுக்க சுதந்திரம் கொடுத்து தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் தற்போது ஜென்டில்மேன்-2 திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு நாயகனாக அர்ஜுனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.
இதையும் படியுங்களேன் – வாய்ப்பு வாங்கி கொடுத்த நயன்தாராவுக்கே இந்த நிலைமையா.?! வருத்தத்தில் ரசிகர்கள்.!
இதற்கிடையில், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ,ஷங்கரை சந்தித்து இப்படம் பற்றி கூறியுள்ளாராம். அவரை இயக்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஷங்கருக்கு இருக்கும் இப்போதைய மாரிக்கெட்டிற்கு கே.டி.குஞ்சுமோனால் ஜென்டில்மேன்-2 படத்தை மொத்தமாக முடித்துவிட முடியும். அதுமட்டுமல்லாம், ஷங்கர் அடுத்தடுத்து பெரிய ஹீரோ படங்களை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் ஷங்கர் இயக்கத்தில் ஜென்டில்மேன்-2 நடக்க வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.