Connect with us
sharmile

Cinema History

கவுண்டமணி என் வாழ்க்கையையே நாசம் பன்ணிட்டாரு!.. ஷர்மிளி பகீர் பேட்டி…

90களில் பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ஷர்மிளி. காமெடி வேடத்தில் நடிப்பதற்கு முன் பல படங்களில் பாடல்களுக்கு நடனமாடும் பெண்களில் ஒருவராக இருந்தார். குணா உள்ளிட்ட பல படங்களிலும் இவர் நடனம் ஆடியுள்ளார். கவுண்டமணியுடம் பல படங்களில் நடித்த ஷர்மிளி அதன் பின் காணாமல் போனார்.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அவரிம் ஒரு பேட்டியெடுத்தார். அப்போது பல வருடங்களாக மனதுக்குள் இருந்த ஆதங்களை கொட்டி தீர்த்துவிட்டார்.

sharmile

நடனமாடும் பெண்களில் ஒருவராக என் கேரியை துவங்கினேன். என்னை பார்த்த கவுண்டமணி அவருக்கு ஜோடியாக என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால், அவர் என்னை விட வயதில் மிகவும் பெரியவர். அதோடு காமெடியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே, முடியாது என சொல்லிவிட்டேன். ஒருநாள் படத்தில் என்னை புக் செய்தார்கள். படப்பிடிப்புக்கு சென்றால் கவுண்டமணிக்கு ஜோடி என சொன்னார்கள். கவுண்டமனி அப்போது மார்க்கெட்டின் பீக்கில் இருந்தார். சரி இரண்டு படங்களில் காமெடியாக நடிப்போம். நமது முகம் மக்களுக்கு பரிச்சயம் ஆகட்டும். அதன்பின் நல்ல வேடங்களில் நடிப்போம் என நினைத்தேன்.

sharmile

ஆனால், கவுண்டமணி என்னை கேட்காமலேயே தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களில் என்னை புக் செய்துவிட்டார். வீரா படத்தில் ரஜினி சாரோடு ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்தது. ஆனால், கவுண்டமணி என்னை விடவே இல்லை. அதேபோல், சிரஞ்சீவி நடித்த முட்டா மேஸ்திரி படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் நடனமாட வாய்ப்பு வந்தது. சிரஞ்சீவியே என்னை ரெக்கமெண்ட் செய்தார். ஆனால், கவுண்டமணி அவருடன் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக என்னை விடவே இல்லை. அதில் சிலுக்கு நடித்தார். அதன்பின் அவர் தெலுங்கில் பெரிய ரவுண்டு வந்தார்.

Goundamani

Goundamani

ஒருகட்டத்தில் இனிமேல் உங்களுடன் நான் நடிக்கமாட்டேன். நான் எனக்கு வரும் வாய்ப்புகளில் நடித்துக்கொள்கிறேன் என அவரிடம் சொன்னதும் எனக்கு வந்த எல்லா வாய்ப்புகளையும் தடுத்துவிட்டார். பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் வாசு என்னைத்தான் தேர்ந்தெடுத்தார். ஆனால், கவுண்டமணி என்னிடம் சொல்லவே இல்லை. கோவை சரளாவை நடிக்க வைத்தார். இப்படி பல படங்களில் என்னை தூக்கிவிட்டு வேறு நடிகைகளுடன் நடித்தார்.

sharmile

நான் வெவ்வேறு படங்களில் நடித்தால் அவருடன் நடிக்க மாட்டேன் என நினைத்தாரோ என்னவோ என் வாழ்க்கையையே நாசம் செய்துவிட்டார். என்னிடம் எதையும் சொல்லவும் மாட்டார். கவர்ச்சி நடிகையாக வலம் வந்திருக்க வேண்டிய என்னை அவருடன் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து என் கேரியரையே கெடுத்துவிட்டார். அப்போது அவரை எதிர்க்கும் தைரியமும், பக்குவமும் எனக்கு இல்லை.

இதுவரை நான் இதை எந்த பேட்டியிலும் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன்’ என ஷர்மிளி ஆதங்கத்துடன் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top