More
Categories: Cinema News latest news

விஜய் பேர்ல இருக்கனும்னு நினைச்சேன்! சாய்பாபா கோயில் பற்றி ஷோபா சொன்ன தகவல்

Actor Vijay: கோலிவுட்டின் கிங், வசூல் சக்கரவர்த்தி என தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார் விஜய். ரஜினியையே மிஞ்சும் அளவுக்கு அதிக ரசிகர் படைபலத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் விஜய் பற்றிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கையில் திடீரென விஜய் சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்யும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீரென சாய்பாபா கோயிலுக்கு ஏன் சென்றார் விஜய்? என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். யாரும் எதிர்பாராத விதமாக இந்த கோயிலை கட்டியதே விஜய் தான் என்ற ஒரு தகவல் பரப்பரப்பானது. விசாரித்ததில் கொரட்டூரில் இருக்கும் இந்த சாய்பாபா கோயிலை விஜய் தன் தாய் ஷோபாவுக்காக கட்டியதாக தகவல்கள் வெளியானது.

Advertising
Advertising

இதையும் படிங்க: எதிர்ப்பை மீறி அந்த மாதிரி பொண்ணை நடிக்க வைத்த பாக்கியராஜ்!.. ரிசல்ட் என்னாச்சு தெரியுமா?..

சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் அவருக்கு சொந்தமான இடத்தில் விஜய் இந்த கோயிலை கட்டியிருக்கிறார். இன்று வியாழக்கிழமை என்பதால் ஷோபா அந்த சாய்பாபா கோயிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறினார்.

அதாவது நீண்ட நாள்களாக விஜயிடம் இதை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். உன் பேரில் இருக்கும் சொத்தில் எனக்கு சாய்பாபா கோயிலை கட்டிக் கொடு என்று கேட்டேன். உடனே விஜயும் எனக்காக இதை செய்திருக்கிறார். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நான் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய இருக்கிறேன். அன்னதானமும் வழங்கப்படும் என்று ஷோபா கூறினார்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிள்ள பாத்தாலும் ஜிவ்வுன்னு இருக்கு!.. ரம்யா பாண்டியனின் நச் கிளிக்ஸ்!…

கோயில் கட்டி முடித்ததும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிதான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. அந்த கும்பாபிஷேகத்திற்கு ஷோபாவுடன் புஸ்ஸி ஆனந்தும் வந்திருந்து சிறப்பித்திருந்தார், கோயில் கட்டி விஜய் இரண்டு முறை வந்ததாக அங்கு இருக்கும் சில மக்கள் கூறினார்கள்.

Published by
Rohini

Recent Posts