Connect with us
STR

Cinema News

இப்படி ஆகிடுச்சே என் நிலைமை-கேரவானுக்குள் குமுறி குமுறி அழுத சிம்பு… ஏன் தெரியுமா?

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மன்மதனாகவும் வல்லவனாகவும் திகழ்ந்து வந்தவர் சிம்பு. மேலும் இளம்பெண்களின் கனகவுக்கண்ணனாகவும் வலம் வந்தார் சிம்பு. எனினும் சிம்புவுக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளால் அவருக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாடு குறைந்துபோனது.

ஆதலால் அவர் மீது பல புகார்கள் எழுந்தன. அதாவது படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் பல தயாரிப்பாளர்கள் அவரை விமர்சனம் செய்தனர். மேலும் அவரது உடல் மிகவும் பருமனாக ஆனது. அவரது உருவத்தை பார்த்து பலரும் கேலி செய்யத் தொடங்கினார்கள்.

எனினும் அந்த கேலிகளை எல்லாம் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டார் சிம்பு. தனது உடலை மீண்டும் கட்டுக்கோப்பாக கொண்டு வந்து “மாநாடு” திரைப்படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

சிம்புவின் உடல் பருமனாக இருந்த காலகட்டத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் “வந்தா ராஜாவாதான் வருவேன்”. இத்திரைப்படத்தில் ஒரு நடன காட்சியில் தனது பருமனான உடலை வைத்துக்கொண்டு சிம்புவால் ஆடமுடியவில்லையாம்.

கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு வருவதாக கூறிவிட்டு கேரவானுக்குள் சென்ற சிம்பு, உள்ளே அழுதுகொண்டிருந்தாராம். அப்போது கேரவானுக்குள் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் சிம்புவை பார்த்து “ஏன் அழுகுறீங்க?” என கேட்க, அதற்கு சிம்பு, “என்னால் முன்பு போல் நடனமாட முடியவில்லை. நான் அதிகமாக வெயிட் போட்டுவிட்டேன். ஆதலால் டான்ஸ் ஸ்டெப்களை கொஞ்சம் எளிமையாக ஆக்குங்கள்” என கூறினாராம்.

அதற்கு டான்ஸ் மாஸ்டரும் சரி என்று ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் டான்ஸ் மாஸ்டரை அழைத்த சிம்பு, “நீங்கள் டான்ஸ் ஸ்டெப்களை மாற்ற வேண்டாம். எனக்கு ஒரு மணி நேரம் டைம் தாருங்கள். அதன் பிறகு வந்து ஆடுகிறேன்” என கூறிவிட்டு கேரவானுக்குள் தீவிரமாக பயிற்சி எடுத்தாராம். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து பாடல் காட்சியில் நடனமாடியிருக்கிறார் சிம்பு.

google news
Continue Reading

More in Cinema News

To Top