More
Categories: Cinema News latest news

மகிழ் திருமேனி இந்த நடிகர் கூட தான் சேர வேண்டிதாம்.. அஜித் பட வாயப்பால் தள்ளிப்போன மாஸ் கூட்டணி!

சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு சமீபத்தில் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவானது.



இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிந்தார்.

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் கனிசமான வரவேற்பைப் பெற்றது.

சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising


2020 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தொடர்ந்து 3 வருடங்கள் கழித்து தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதற்கு முன்பே மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க சிம்பு முடிவெடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தில் ஒப்பந்தமானதால் சிம்பு நடிக்கும் புதிய படத்தினை இயக்க முடியாத சூழ்நிலை உருவானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விரைவில் இந்த படம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு சிம்பு நடிக்கும் புதிய படத்தினை மகிழ் திருமேனி இயக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Published by
muthu

Recent Posts