More
Categories: Cinema History Cinema News latest news

நயன்தாரா, ஹன்சிகாலாம் இதனால் தான் விட்டுட்டுப் போயிட்டாங்களா.. சிம்பு என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

விண்ணைத்தாண்டி வருவாயா சூட்டிங் ஸ்பாட் செட்டில் நடிகர் சிம்பு அளித்த த்ரோபேக் பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் சிம்பு பேசிய தத்துவ பேச்சை கேட்ட நெட்டிசன்கள் இப்படி பேசிட்டு இருந்ததாலத்தான் நயன்தாரா, ஹன்சிகாலாம் உங்களை விட்டுட்டுப் போயிட்டாங்களா என கமெண்ட் போட்டு கடுப்பேற்றி வருகின்றனர்.

Advertising
Advertising

அப்பா டி. ராஜேந்தர் படங்களில் சிறு வயது முதலே நடிக்க ஆரம்பித்த சிம்பு அப்பாவை போலவே பல திறமைகளை சிறு வயதிலேயே சீக்கிரமாகவே வளர்த்துக் கொண்டு அப்பாவின் தயவாலே சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

சொன்னால் தான் காதலா படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சிம்பு தொடர்ந்து நடித்த தம், குத்து உள்ளிட்ட படங்கள் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. மன்மதன் படத்தின் கதையை எழுதி நடித்த சிம்புவுக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் வல்லவன் படத்தை இயக்கி நடித்து இருந்தார் சிம்பு.

நயன்தாராவுடன் காதல்

ஆரம்பத்தில் இருந்தே சிம்பு நடிக்கும் படங்களில் அவருடன் இணைந்து நடித்த சார்மி, அலை படத்தில் இணைந்து நடித்த த்ரிஷா உள்ளிட்ட பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், வல்லவன் படத்தில் நடிகை நயன்தாராவுடன் படுக்கையறை காட்சிகள் என எல்லை மீறி நடித்த நிலையில், இருவர் பற்றிய கிசுகிசுக்கள் பெரியளவில் வெடித்தது.

நடிகர் சிம்பு மற்றும் நயன்தாராவின் பிரைவேட் லிப் லாக் புகைப்படங்கள் வெளியான நிலையில், இருவரும் காதலிப்பது உறுதியானது. பொதுவாகவே இயக்குநர்கள் மீது நடிகை நயன்தாராவுக்கு ஒரு கிரஷ் இருந்து வந்த நிலையில், சிம்பு இயக்கத்தில் அவருடன் இணைந்து நடித்ததில் அவர் மீது காதல் வயப்பட்டார். ஆனால், அந்த காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

நிரந்தரமில்லாத காதல்

அதன் பின்னர், சிம்பு மற்றும் நயன்தாரா பிரேக்கப் செய்துக் கொண்ட நிலையில், வாலு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்கிற வருத்தத்திலும் காதல் தோல்வியில் சுற்றித் திரிந்து வந்த சிம்புவை பார்த்து நடிகை ஹன்சிகா மோத்வானியும் காதலில் விழுந்தார். ஆனால், அந்த காதலும் சிம்புவுக்கு நீடிக்கவில்லை.

இப்படி அடுத்தடுத்து நடிகைகள் சிம்பு மீது காதல் கொள்வதும் பின்னர் பிரிந்து செல்வதுமாக இருந்து வந்த சூழலில் நடிகர் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அளித்த பேட்டி ஒன்று தான் அதற்கு காரணம் என நெட்டிசன்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

அன்றே கணித்த சிம்பு

”நம்ம வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்லையே, இந்த தாடி லைட்டா எனக்கு நல்லா இருக்குன்னா நாளைக்கு ஷேவ் பண்ணா போயிடும். இதுக்கு முன்னாடி சிஆர்டி வச்சிருந்தேன், இன்னைக்கு நான் புது வண்டி வாங்கிட்டேன். சோ என்ன சொல்றது.. யாருமே நம்மக் கூட இருக்கப் போறது இல்லை, நம்ம கடைசியா போகும் போது நம்ம மட்டும் தான் நம்ம கூட இருக்கப் போறோம்” என அந்த பேட்டியில் நடிகர் சிம்பு பேசிய வீடியோவை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் கடைசி வரை சிம்பு சிங்கிளாத்தான் இருக்கப் போகிறார் என அன்றே கணித்து விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

இதன் வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க.

 

Published by
Saranya M

Recent Posts