More
Categories: Cinema News latest news

நான் பிளேபேக் சிங்கர் தெரியுமா?.. ஃபுல் போதை.. பிரபல பாடகர் விமான நிலையத்தில் பண்ண அலப்பறை!..

பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் விமான நிலையத்தில் குடித்து விட்டு தகராறு செய்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

சசிகுமார் இயக்கி நடித்து அறிமுகமான சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலை ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் பாடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவர் வேல்முருகன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சண்டை காட்சிகளில் முதல் முறையாக புதிய யுக்தியை கொண்டு வந்த கமல் படம்!.. அட அந்த படமா?!…

நாடோடிகள் படத்தில் இடம்பெற்ற “ஆடுங்கடா”, ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற “ஒத்த சொல்லால” உள்ளிட்ட பாடல்கள் வேல்முருகனுக்கு மிகப்பெரியளவில் வெற்றியை தந்தன.

பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராகவும் வேல்முருகன் கலந்து கொண்டார். தனுஷ் படங்களுக்கு அதிகமாக பாடல்களை பாடியுள்ளார். அசுரன் படத்தில் இடம்பெற்ற “கத்தரி பூவழகி” பாடலையும் இவர் தான் பாடினார்.

இதையும் படிங்க: வேறலெவல் மாப்பிள்ளையை பிடித்த வரலட்சுமி!.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே!..

கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தின் மூலம் நடிகராகவும் வேல்முருகன் அறிமுகமானார். படைப்பாளன் எனும் படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். அதன் பின்னர் பெரிதாக பாடுவதற்கு சான்ஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. குடித்து விட்டு வேல்முருகன் சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாக்குவாதத்தின் போது, நான் எவ்ளோ பெரிய பிளேபேக் சிங்கர் தெரியுமா என்றும் என்ன இவங்க கன்ட்ரோலா இது என்றும் கத்துகிறார்.

Published by
Saranya M

Recent Posts