வீட்டிற்கு வந்த ரோகிணி… விஜயாவிற்கே பல்ப் கொடுத்த மனோஜ்… இந்த உருட்டு நல்லா இருக்கே!

siragadikadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
ரோகிணி வரேன் எனச் சொல்லிவிட்ட பின்னர் அண்ணாமலை விஜயாவிற்கு கால் செய்கிறார். பார்வதி வீட்டில் இருக்கியா எனக் கேட்க விஜயா உங்களுக்கு எப்படி தெரியும் என்கிறார். உனக்கு இருக்க ஒரே பிரண்ட் அவ தான். வீட்டுக்கு கிளம்பி வா. அம்மா வந்து இருக்காங்க எனக் கூறுகிறார் அண்ணாமலை.
விஜயா, அவங்களுக்கு எதுக்கு சொன்னீங்க எனக் கேட்க இந்த பிரச்னையை சமாதானம் பேச வேண்டிய நீ போய் உட்கார்ந்துக்கிட்ட அப்போ யார் வந்து பேசுறது. ரோகிணியும் வரா பேசி தீர்த்துக்கலாம் எனக் கூறுகிறார்.
இருக்க கோபத்தில் அவளை பாத்தா என்ன செய்வேனே தெரியாது. உங்க அம்மா தடுக்க கூடாது எனச் சொல்லிவிட்டு பார்வதி வீட்டில் இருந்து கிளம்புகிறார். ஒரே நேரத்தில் இருவரும் வந்து வாசலில் ஆட்டோவில் நிற்கின்றனர்.

ரோகிணி சிரிக்க விஜயா முறைக்கிறார். ஆட்டோ காசை விஜயா கொடுக்க அவர் சில்லரை இல்லை எனக் கூற ரோகிணி கொடுக்க வரும் போது விஜயா ஒன்னும் வேணாம் எனச் சொல்லி விடுகிறார். பின்னர் இருவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் வருகின்றனர்.
இதை பார்க்கும் முத்து சமாதானம் ஆகிட்டாங்க போலயே பாட்டி எனக் கூற விஜயா அதெல்லாம் இல்லை என்கிறார். விஜயாவை பாட்டி என்ன நீ பாட்டுக்கும் கிளம்பி போனா? பெரிய மனுஷி மாதிரி நடந்துக்கணும் தானே எனத் திட்டுகிறார்.
விஜயா என்னமோ தப்பு செஞ்சது நான் மாதிரி என்கிட்ட கேட்கிறீங்க என்கிறார். ரோகிணியை மனோஜ் அழைத்து வருகிறார். ஆனால் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக அழுதுக்கொண்டே இருக்கிறார். விஜயா மனோஜை அடிக்க சொல்ல முத்து அதெல்லாம் இங்க செய்ய கூடாது என்கிறார்.
மீனா பேசப்போக நீங்க தானே அந்த கறிக்கடைக்காரனை அழைச்சிட்டு வந்தீங்க எனக் கேட்க நாங்க சண்டைக்காக அழைச்சிட்டு வரலை. இந்த விஷயம் வீட்டுக்கு தெரியணும் நினைச்சோம் எனக் கூற ரோகிணி மீனாவை முறைத்து கொண்டு இருக்கிறார்.
விஜயா மீனாவிடம் கரண்டியை சூடு வைக்க சொல்ல அதெல்லாம் வன்கொடுமை என்கிறார் ஸ்ருதி. இதற்கு விஜயா ரவியிடம் இவள சும்மா இருக்க சொல்லு எனக் கூற அவ சொல்றது சரிதானே என்கிறார். ஸ்ருதி இவனாச்சும் எனக்கு சப்போர்ட் செய்றானே. மத்தவங்க மாதிரி அமைதியா இல்ல என்கிறார்.
இதில் கடுப்பாகும் விஜயா இவ என்னையே ஏமாத்திட்டா எனக் கூறி மீண்டும் ரோகிணியை அடிக்க பாய்கிறார். ஒரு கட்டத்தில் மனோஜ் அம்மா என அழைத்து ரோகிணி தன்னிடம் எல்லாம் சொல்லிட்டா எனக் கூற விஜயா கோபமாகி அவரை அடிக்கிறார்.
அண்ணாமலை மனோஜிடம் அன்னைக்கு நான் கேட்டப்போ தெரியாத மாதிரி பேசுனீயே என்கிறார். முத்து மனோஜுக்கு தெரிஞ்சா முதலில் அம்மாக்கு தெரிஞ்சிருக்கும் எனக் கேட்க அவங்க கோபப்படுவாங்க எனக் கூறுகிறார்.