Connect with us

Cinema News

விஜயாவுக்கு முத்து கொடுத்த பல்ப்…மனோஜுக்கு ரோகிணி கொடுத்த ஐடியா… ஆசை தான்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து எல்லாருக்கும் கால் செய்து கீழே வரச் சொல்கிறார். விஜயா எதுக்கு இப்ப எல்லாரையும் கீழே வர சொல்லி தொல்லை பண்றான் எனக் கடுப்பாகிறார். முத்து வர சொல்லியிருந்தால் ஏதாவது விஷயம் உண்டு என அண்ணாமலையிடம் சொல்கிறார். 

எல்லாரும் கீழே வர முத்து ஸ்டைலாக நிற்கிறார். எல்லோரும் எதுக்குடா கீழ வர சொன்ன என்று கேள்வி கேட்க முத்து வீட்டின் கதவை திறந்து வண்டியை காட்டுகிறார். இது என்ன புது வண்டி? யாருக்கு எனக் கேட்கிறார். மீனாவுக்குப்பா. இனிமே நடமாடும் பூக்கடையா மாறிடுச்சு என்கிறார். இனி யாரும் இந்த வண்டியை தூக்கிட்டு போக முடியாது என்கிறார். 

இதையும் படிங்க: என்ன அமல் டேவிஸ்!.. சச்சின் இல்லாத நேரம் பார்த்து ரீனுவுக்கு ரூட் விடுறியா.. காண்டான ஃபேன்ஸ்!..

எதுக்கு தேவையில்லாத செலவு என்று மீனா கேட்கிறார். எல்லாரும் செய்கிற வேலையை விட நீ செய்யற வேலை ஒசத்திதான் என முத்து பாராட்ட மீனா சந்தோஷப்படுகிறார். சாவியை முத்துவிடம் கொடுக்கு முத்து வண்டி ஓட்ட தெரியுமா எனக் கேட்க பின்னாடி உட்காருங்க தெரியும் என முத்துவை உட்கார வைத்து ஓட்டி செல்கிறார். 

பின்னர், ரூமுக்கு வரும் மனோஜ் ரோகிணியிடம் மீனா முத்துவுக்காக கார் வாங்கி கொடுத்தாங்க. முத்து மீனாவுக்காக பைக் வாங்கி கொடுத்து இருக்கான். ரவிக்கு அவங்க மாமனார் வீட்டில் ரெஸ்டாரன்ட் வைக்க போறாங்க. எனக்கு ஹெல்ஃப் பண்ண தான் ஆள் இல்லை என்கிறார். முயற்சி பண்ணினா வேலை தரும் என ரோகிணி கூறுகிறார். எனக்கு பிசினஸ் தான் சரியா வரும் என்று தனக்கு நம்பிக்கை இருக்கு.

ஆனா பணம் தான் என்னிடம் இல்லை. உங்க அப்பா எப்ப வெளிய வருவாரு என்கிறார் மனோஜ். அதிரும் ரோகிணி எங்க அப்பாவோட பணம் தான் முக்கியமா என்று ரோகிணி கேள்வி கேட்க நான் அப்படி சொல்லலை எனச் சமாளிக்கிறார். நமக்கு இருக்க ஒரே வழி உன்னிடம் இருந்து 27 லட்சம் பணத்தை எடுத்துட்டு போனாளே அந்த பொண்ணு தான். தேடி கண்டுபிடிச்சு அவளிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்கணும் என்கிறார்.

இதையும் படிங்க: கில்லி படத்துல திரிஷா இல்லை நான்தான் நடிக்க வேண்டியது!.. தேவையில்லா சகவாசத்தால் மிஸ் பண்ணிட்டேன்!..

அது எப்படி முடியும் என கேட்க ஏஜென்சி மூலமாகத்தான் போய் இருப்பா, அங்க போய் விசாரிச்சா கனடாவில் அவள் இருக்கும் அட்ரஸ் தெரியும். இங்க இருந்தே போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவளை பிடிச்சிடலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அடுத்து அம்மா வீட்டிற்கு வரும் மீனா வண்டியை காட்டி சந்தோஷப்படுகிறார். ஆனால், சத்யா இது ஒரு பெரிய விஷயமா? சம்பாதித்து தருவானு வாங்கி கொடுத்திருப்பாரு என்று மட்டம் தட்டுகிறார்.

அவர் பணத்துக்கு ஆசைப்படுவது கிடையாது என மீனா பதிலடி கொடுக்கிறார். அடுத்ததாக, மனோஜ் மற்றும் ரோகிணி பாஸ்போர்ட் ஏஜென்சிக்கு வந்து ஜீவா பற்றி விசாரிக்கின்றனர். அப்போது, மனோஜ் தன் மொபைலில் இருந்த போட்டோவை எடுத்துக்காட்டுகிறார். இவ்வளவு நாளா நீ அந்த பொண்ணு போட்டோவை போன்ல வைச்சிக்கிட்டு தான் சுத்துனியா எனக் கடுப்படிக்கிறார் ரோகிணி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது‌. 

இதையும் படிங்க: கில்லி எஃபெக்ட்!.. திரிஷாவை பார்க்க கேரவனை முற்றுகையிட்ட ரசிகர்கள்.. எந்த இடம்.. என்ன படம் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top