More
Categories: Cinema News latest news television

முத்துவால் ரோகிணியிடம் சிக்கிய ஜீவா!.. காசை கேட்டு சண்டைக்கு நிற்கும் மனோஜ்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ஏஜென்சிக்கு வரும் ஜீவா தன்னுடைய டிக்கெட் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் மனோஜ் வந்து விசாரித்த விஷயத்தினை கூற இதனால் ஜீவா அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் இனி யார் வந்து தன்னை பற்றி விசாரித்தாலும் சொல்ல வேண்டும் எனக் கூறி கிளம்புகிறார்.

இதனை தொடர்ந்து காரில் குழப்பமாக சென்று கொண்டு இருக்கிறார். பின்னர் பார்லர் போகலாம் எனப் பேசிக்கொண்டு இருக்க முத்து தனக்கு தெரிந்த பார்லர் எனக் கூறி ரோகிணி பார்லரில் இறக்கிவிட்டு செல்கிறார். உள்ளே வரும் ஜீவாவை பார்த்து ரோகிணி ஷாக் ஆகிறார்.

இதையும் படிங்க:லோகேஷ் கனகராஜுடன் உருண்டு புரண்ட ஸ்ருதிஹாசன்!.. இப்போ 2வது காதலரை கழட்டி விட்டுட்டாரா?..

அவரை உட்கார வைத்து பேசிக்கொண்டே பெயர் ஜீவா என்பதை தெரிந்து கொள்கிறார். பின்னர் மனோஜுக்கு கால் செய்து ஜீவா பார்லரில் இருக்கும் விஷயத்தினை கூறி உடனே வரச் சொல்கிறார். மறுபக்கம், மீனா ஆர்டருக்கு பூவை வந்து கொடுத்து விட்டு வெளியில் வருகிறார்.

அப்போ ஸ்கூட்டி நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்ததால் போலீஸ் எடுத்து சென்ற விஷயம் தெரிகிறது. மனோஜ், பார்லருக்கு வந்து ஜீவாவுக்கு ஷாக் கொடுக்கிறார். என்னிடம் திருடி போன பணத்தை கொடு எனக் கேட்க ஜீவா உன்னுடன் வாழ்ந்த நாளுக்காக இதை கழிச்சிக்கிறேன் எனக் கடுப்படிக்கிறார்.

ரோகிணி அவரை திட்ட நீ யார் இதை கேட்க என ஜீவா சொல்ல நான் அவன் பொண்டாட்டி என்கிறார் ரோகிணி. பின்னர் ஜீவா காசு கொடுக்க மறுக்க போலீஸை வரச் சொல்லிவிடுகிறார். ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்து செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: அமரன் ரிலீஸ் அப்டேட்டான்னு எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்!.. கடைசியில கமல் வச்ச ட்விஸ்ட்!..

Published by
Akhilan

Recent Posts