Connect with us

Cinema News

ஒருவழியா முத்துவை வில்லனாக்கியாச்சு… டைரக்டர் மீது காண்டான ரசிகர்கள்…

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் வாசுதேவன் தொடர்ந்து மீனா மீது திருட்டுப்பழியை சுமத்திக்கொண்டே இருக்கிறார். இருந்தும் முத்து அமைதியாகவே பேசிக் கொள்ளலாம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என தொடர்ந்து  சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

இதை அடுத்து, எனக்கு தெரியும் அவங்க குடும்பம் எல்லாமே அப்படித்தான். மீனா தம்பி உங்க பைக்கை திருடி தானே  உங்க கல்யாணம் நடந்துச்சு. நீயும் பூக்கடை தானே வச்சிருக்க அப்புறம் எதுக்கு உனக்கு இந்த திருட்டு புத்தி. பேசாம எதுக்கு நீ பிச்சை எடுக்கலாம் என மோசமாக பேசுகின்றனர்.

இதையும் படிங்க: டேனியல் பாலாஜியின் மரணம்.. கோயிலில் நடந்த அதிசயம்! கதிகலங்கி நிற்கும் ஆவடி மக்கள்

இதனால் பொறுமை இழக்கும் முத்து வாசுதேவனை பளார் என அறைந்து விடுகிறார். அண்ணாமலை  முத்துவை கொஞ்சம் பொறுமையா இருடா என பிடித்து நிறுத்துகிறார். அந்த நேரத்தில் உள்ளே வரும் ஸ்ருதி நடந்ததை தெரிந் தெரிந்து கொள்ளாமல் முத்துவின் மீது கோபப்படுகிறார்.விஜயாவும் சேர்ந்து கொண்டு பேச இதான் சாக்குனு அவங்கள பேச வேணாம்னு சொல்லுங்கப்பா என்கிறார் முத்து.

விஷயத்தை தெரிந்து கொள்ளாத ஸ்ருதி, என்னவேணாலும் நடந்திருக்கட்டும். எங்க அச்சன எப்படி அவரு அடிக்கலாம் எனத் திட்டுகிறார். இதில் கடுப்பாகும் முத்து நாங்க இங்க வந்தது தப்புதான் என சொல்லிவிட்டு மீனாவை கூப்பிட்டுக்கொண்ட கிளம்பி விடுகிறார்.

வாசுதேவனின் மனைவி இதுக்கு தான் அந்த குடிகாரன் நீங்க கூப்பிடக்கூடாதுன்னு சொன்னேன் என பிரச்சனையை தொடர்ந்து பெரிதாக்கி கொண்டே இருக்கிறார். உங்க வீட்டுக்காரர் தான் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாரு என அண்ணாமலை சொல்கிறார்.

இதையும் படிங்க: பிரபல மலையாள நடிகரை கோட்டில் களமிறக்க நினைத்த வெங்கட் பிரபு… ஆனா?

அண்ணாமலை ஸ்ருதி அழைச்சிட்டு வீட்டுக்கு வா எனக்கு கூப்பிட, நான் வரல என சொல்லும் ஸ்ருதி ரூமுக்குள் சென்று அடைந்து விடுகிறார். இங்க நடந்த பிரச்சினையை பெரிதாகுனது ஸ்ருதி அப்பா தான் நீ பேசி புரிய வைத்து வீட்டுக்கு அழைச்சிட்டு வா என ரவியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார் அண்ணாமலை.

நடந்த பிரச்சனையில் ரோகிணி தன்னை இனிமேல் மாமியார் கண்டுகொள்ள மாட்டார் என நிம்மதி பெருமூச்சு விடுகிறார். வித்யா இப்போ காப்பாற்றினது முத்து தான் என சொல்லி சிரித்துக் கொண்டு அங்கு இருந்து செல்கின்றனர். இதை எடுத்து வீட்டுக்கு வரும் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார்.

அப்போ ஒரு அண்ணாமலையிடம் முத்துவை குறித்து திட்டி பேசிக்கொண்டே இருக்கிறார். அவன் மனைவியை பற்றி தப்பா சொன்னால் அவன் எப்படி அமைதியாக இருப்பான் மீனா அப்படிப்பட்ட பொண்ணா எனக் கேட்கிறார்.  அவர் செஞ்சாலும் செஞ்சிருப்பா என்கிறார் விஜயா. இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top