Connect with us

Cinema News

நீங்களாம் பெரிய ஒழுங்கு.. சண்டை போட்டா தப்பா..? சிறகடிக்க ஆசையில் இந்த கொலைவெறி தேவையா..?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரோகினியிடம் மனோஜ் ஸ்ருதி குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். ரோகினி அவளால நிறைய காரியம் ஆக வேண்டி இருக்கு என்கிறார். நீயே பணக்காரி உங்க அப்பா லெவலுக்கு அவ அப்பா இல்லை எனக் கூறுகிறார் மனோஜ்.

நான் எல்லாத்தையும் அப்பாகிட்டை கேட்க முடியுமா? லிமிட்டோட இருக்கேன் எனக் கூறி ஸ்ருதிக்கு மேக்கப் செய்ய செல்கிறார். முடித்துவிட்டு ரோகினி கிளம்பிவிட அங்கு வரும் மீனா இப்போ தான் கல்யாண பொண்ணு மாதிரி இருக்கீங்க என்கிறார். அப்போ நான் கல்யாணத்துல நல்லா இல்லையா எனக் கேட்கிறார் ஸ்ருதி.

இதையும் படிங்க: அய்யோ பத்திக்கிச்சு!.. பிக் பாஸ் முடிஞ்சதும் பூர்ணிமா அந்த போட்டியாளர் வீட்டுக்கு போகப் போறாராம்?..

அன்னைக்கு இருந்த நிலைமைல நீங்க எப்படி இருந்தீங்கனே நான் பார்க்கலை என்கிறார் மீனா. அங்கு வரும் விஜயா மீனாவை திட்டி போய் நட்ஸ் போட்டு பால் காய்ச்சு வை என அனுப்பி விடுகிறார். இதையடுத்து மீனா வெளியே போக தண்ணி குடிக்க வரும் முத்து அந்த பால் தனக்குதான் என குடித்து விடுகிறார்.

செம டேஸ்ட்டா இருந்ததா மீனாவிடம் வந்து கூற விஜயா அதை ஏன் நீ குடிச்ச அது ஸ்ருதி-ரவிக்காக வச்ச பாலு என்கிறார். இதையடுத்து மீனாவிடம் முத்து வடிச்ச கஞ்சியை ஊத்து எனத் திட்டிவிட்டு மாடிக்கு செல்கிறார். இதையடுத்து ரவி முத்துவிடம் வந்து தன்னை மன்னித்துவிடும்படி கூறுகிறார்.

உன்னால் தான் அப்பா அசிங்கப்பட்டாரு என முத்து சொல்ல நான் எதுவும் செய்யலை. எல்லாம் உன்னால தான் என ரவி முத்துவை குத்தம் சொல்ல அங்கு வரும் மனோஜும் சேர்ந்து கொள்கிறார். அதான் ரெண்டு திருட்டு பசங்களும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா என்கிறார். மனோஜ், ரவியை கீழே அம்மா கூப்பிடுவதாக அழைத்து சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: அதெப்படி திமிங்கலம்!.. குப்பையை அள்ளி குப்பை மேலயே போடுறாரு.. விஜய் பெயரை தொடர்ந்து டேமேஜ் பண்றாங்களே!..

கீழே ஸ்ருதியிடம் ரோகினியை பற்றி பெருமையாகவும், மீனாவை அசிங்கப்படுத்தியும் பேசுகிறார் விஜயா. ஆனால் ஸ்ருதி அவங்க செமையா சமைப்பதாகவும் தனக்கே வராது எனவும் சப்போர்ட் செய்து பேசுகிறார். அங்கு வரும் அண்ணாமலைக்கு மீனா தண்ணி கொடுக்க இதை ஆச்சரியமாக கேட்கிறார் ஸ்ருதி.

இது கலாச்சாரம் கத்துக்கோ என்கிறார் அண்ணாமலை. விஜயா இவங்களை அசீர்வதிக்க சொல்ல முத்துவை கூப்பிட சொல்கிறார். எல்லாருமே வேண்டாம் எனக் கூறியும் விடாப்பிடியாக அண்ணாமலை முத்துவை கீழே அழைத்து வரச் சொல்லி மீனாவை அனுப்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top